Author Topic: ~ பாத வெடிப்பால் உங்கள் கால்கள் அசிங்கமாக தெரிகிறதா? ~  (Read 362 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226710
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பாத வெடிப்பால் உங்கள் கால்கள் அசிங்கமாக தெரிகிறதா?



கால்கள் தான் நம்முடைய உடலின் முழு எடையையும் சமநிலையில் இருக்க செய்கிறது. அந்த கால்கள் உலர்ந்து, பிளவுற்று இருந்தால் காண்பவர் கண்ணை கவரும் வகையில் இல்லாமல் உடலின் ஒட்டுமொத்த அழகு தோற்றத்தையும் கண்டிப்பாக கெடுத்துவிடும்.

நம்மில் பெரும்பான்மை மக்கள் இப்பிரச்சனையை தினசரி அடிப்படையில் சமாளித்துக் கொண்டிருந்தாலும், சிலருக்கு இது ஒரு பருவக்கால பிரச்சனையாக இருக்கிறது.
கால்களை ஊற வைக்கவும்
கால்களை நன்றாக கழுவுவதால் மட்டும் மென்மையானது ஆக்குவதற்கு போதுமானதாகாது. கால்களை நன்றாக தேய்ப்பது தவிர, குறைந்தது 5-10 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் கால்களை ஊற வைக்க வேண்டும்.
படிகக் கல்லைப் பயன்படுத்தவும்
ஒரு படிகக் கல்லை எடுத்து குதிகால், கால்விரல்கள் மற்றும் பாதம் இவற்றை மெதுவாக தேய்க்கவும். இவ்வாறு குறைந்தது வாரம் ஒன்று அல்லது இரண்டு முறையாவது செய்யவும். இந்த முறையினால் படிகக்கல், கால்களை மென்மையாகவும் மற்றும் பட்டு போன்றும் செய்து அதிலுள்ள இறந்த செல்களை நீக்கவும் உதவுகிறது.
நகங்களை ஷேப் செய்யவும்
நக வெட்டியைக் கொண்டுக் கூடுதலாக வளர்ந்துள்ள கால்விரல் நகங்களை வெட்டிவிடவும். நீண்ட கால் நகங்களால் அழுக்கு மற்றும் நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் விருந்தாளிப் போல் நகங்களின் கீழே தங்கி விடக் கூடும்.
மாய்ச்சுரைசர்
கொஞ்சம் மாய்ஸ்சரைசர் எடுத்து கால்களில் பரவலாக தேய்க்கவும் மற்றும் சுத்தமான பருத்தி காலுறைகளை இடவும். தூங்குவதற்கு முன் அதை செய்ய அதனால் ஈரப்பதம் விளைவு அதிகமாக இருக்கும்.
எலுமிச்சை
ஒரு நாள் விட்டு ஒரு நாள் எலுமிச்சை தோலால் பாதங்களை நன்றாக தேய்த்து கழுவுங்கள். இது வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி பாதங்களை சுத்தமாக்கும்.
கல் உப்பு
இரவில் உறங்கப்போகும் முன் ஒரு பாத்திரத்தில் வெந்நீரில் கல் உப்பை போட்டு அதில் பாதங்களை 20 நிமிடம் ஊற வைக்கம் அழுக்குகள் நீங்கி, மென்மையாகும்.