Author Topic: ~ தாய்மார்களே குழந்தைக்கு பால் கொடுக்கும் போது கோபப்படாதீங்க ~  (Read 906 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227533
  • Total likes: 29063
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தாய்மார்களே குழந்தைக்கு பால் கொடுக்கும் போது கோபப்படாதீங்க



தாய்மார்களே உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் போது நீங்கள் கோபப்பட கூடாது என்று ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்,,! கோபத்தின் உச்சத்தில் இருக்கும் தாய் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அந்த கோப உணர்ச்சியினால் ஏற்படும் கெடுதல்கள் அந்த பாலையே நஞ்சாக்கி, குழந்தை இறக்கும் வாய்ப்பை கூட ஏற்படுத்துகிறதாம்.
எனவே தாய்மார்கள் பாலூட்டும் போது அமைதியான சூழ்நிலையில் தாய்ப்பாலுட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். கோபம் என்பது ஒரு உணர்வு. எரிச்சல், மனக்கடுப்பு, வருத்தம், சீற்றம், ஆத்திரம், ஆவேசம், பெரும்சினம் இவை எல்லாம் கோபத்தின் பெருவகைகள். கோபம் என்பது ஒரு சில இடங்களில் அவசியம்தான் அதேசமயம் எதற்கெடுத்தாலும் கோபம், எப்போதும் கோபம் என்று இருக்கக் கூடாது.
கோபம் உடலில் பல கெடுதல்களை ஏற்படுத்துகிறது. கோபத்தோடு தன் குழந்தைக்கு தாய்பால் அந்த கோப உணர்ச்சியானது பாலையே நஞ்சாக்கிவிடுமாம். கோபத்தில் இருக்கும் தாயின் பாலை அருந்தும் குழந்தைக்கு உடல் உபாதைகளும், மந்த நிலையும் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தாய்மார்கள் தன் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது அன்போடும், பாசத்தோடும் கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். தாய்மார்களே எந்த கோபம் இருந்தாலும் அதை குழந்தையின் மேல் காட்டாமல் அன்போடு அரவணைத்து கொள்ளுங்கள்.