Author Topic: ~ கருமையை நீக்கி இளமை தரும் சாமந்திப்பூ ~  (Read 474 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226727
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கருமையை நீக்கி இளமை தரும் சாமந்திப்பூ



சாமந்திப்பூவில் அழகை மேம்படுத்தும் ஏராளமான குணங்கள் அடங்கியுள்ளன.சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் உதிர்த்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்.
அதில் சாமந்திப் பூக்களைப் போட்டு, அடுப்பை அணைத்து, ஒரு இரவு முழுவதும் அப்படியே மூடி வைத்து விடவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதில் முகம் கழுவினால், முகம் பொலிவு பெறும். இந்தத் தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
சருமத்தின் கருமை நீங்கும். இளமையான தோற்றம் கிடைக்கும். சாமந்திப்பூ கலந்த டீ கிடைக்கிறது. இது மருத்துவ மற்றும் அழகு அம்சங்கள் பொருந்தியது.
சாமந்திப்பூ கலந்த டீ டிகாக்ஷனை குளிர வைத்து, அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைத்து ஓய்வெடுத்தால் கண்களுக்கு அடியில் உள்ள கருமை நீங்கும். கண்களின் வீக்கம் குறையும்.
இந்த டிகாக்ஷனை நீர்க்கச் செய்து, பஞ்சில் தொட்டு முகம் முழுக்கத் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவினால் வெயில் பட்டுக் கருத்துப் போன சருமம் நிறம் மாறும்.