Author Topic: ~ சிக்கன் நெய்சோறு ~  (Read 428 times)

Offline MysteRy

~ சிக்கன் நெய்சோறு ~
« on: March 01, 2016, 10:16:59 PM »
சிக்கன் நெய்சோறு



சிக்கன் – 500 கிராம்
பாசுமதி அரிசி – 500 கிராம்
பச்சைமிளகாய் – 10
வெங்காயம் – கால் கிலோ
தக்காளி – 3
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 10 பல்
ஏலம் – 3
கிராம்பு – 3
பட்டை – சிறிது
புதினா – கால் கட்டு
கொத்தமல்லி இலை – கால் கட்டு
முந்திரிப்பருப்பு – 10
மிளகாய்தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – ஒரு தேக்கரண்டி
தேங்காய் – அரை மூடி
நெய் – 100 கிராம்
எண்ணெய் – 100 கிராம்
உப்பு – சுவைக்கு ஏற்ப
எலுமிச்சைபழம் – அரை மூடி

அரிசியை (ஒரு பங்கு அரிசிக்கு ஒன்றரை மடங்கு தண்ணீர் விட்டு குழையாமல்) வேகவைத்து ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆறவிடவும்.
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவும்.
தேங்காயை விழுது போல் அரைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றி முந்திரிப்பருப்பைப் பொன்னிறமாக வறுத்துத் தனியே வைக்கவும்.
பிறகு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலம் போட்டு வெடித்ததும் வெங்காயம் சேர்த்துக் பொன்னிறமாக வதக்கவும்.
அதில் பாதியை எடுத்து தனியாக வைக்கவும். பிறகு வதக்கிய வெங்காயத்துடன் தட்டி வைத்த பொருட்களைப் போட்டு வதக்கி, வாசனை வரும் போது மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
பிறகு கரம் மசாலா சேர்த்து நறுக்கி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு எண்ணெய் சுண்டும் வரை கிளறி, கடைசியில் தேங்காய் விழுதைச் சேர்த்து சிக்கனை மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
சுவைக்கு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும். சிக்கன் கறி நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும், எலுமிச்சை பழத்தைப் பிழிந்து விடவும்.
பிறகு கொத்தமல்லி புதினாவைத் தூவவும். ஆற வைத்திருக்கும் சாதத்தில் வதக்கிய கறி மசாலாவைக் கொட்டி நன்கு கிளறவும்.
கடைசியில் வறுத்த முந்திரிப்பருப்பு, வெங்காயத்தையும், நெய்யையும் சேர்த்து கிளறிப் பரிமாறவும்.