Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ மூலச்சூடு, இருமல், சளி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் கஞ்சாங்கோரை ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ மூலச்சூடு, இருமல், சளி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் கஞ்சாங்கோரை ~ (Read 408 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226755
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ மூலச்சூடு, இருமல், சளி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் கஞ்சாங்கோரை ~
«
on:
February 07, 2016, 09:46:37 AM »
மூலச்சூடு, இருமல், சளி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் கஞ்சாங்கோரை
மூலிகையின் பெயர் :- கஞ்சாங்கோரை.
தாவரப்பெயர் :- ocimum canum
பயன்தரும் பாகங்கள் :- இலை, விதை மற்றும் பூ.
வேறு பெயர்கள் :- நாய் துளசி, சங்கரத்துளசி மற்றும் பேய் துளசி என்பன.
* இலை கோழையகற்றி இருமல் தணித்தல், உடலில் வியர்வையைப் பெருக்குதல், வெப்பம் மிகுத்து ஆற்றலை அதிகப்படுத்துதல், முறை நோய் நீக்கல், விதை தாதுவெப்பு அகற்றல் ஆகிய செய்கைகளையுடையது.
* இலைச்சாற்றில் 30 துளி, சிறிது பாலுடன் குழந்தைகளுக்குக் கொடுக்க மாந்தக் கழிச்சல், விக்கல், இருமல், சளி ஆகியவை குணமாகும்.
* இலையை அரைத்துச் சுண்டைக் காயளவு தயிரில் கலந்து காலை மாலை கொடுக்க மூலச்சூடு, கணச்சூடு, மேகநோய் தீரும்.
* பத்து கிராம் இலையும், ஒரு கிராம் மிளகும் சேர்த்து அரைத்து வெந்நீரில் கொடுக்கச் சளி வெளியாகி மார்ச்சளி, காசம், இருமல், ஆரம்ப எலும்புருக்கி ஆகியவை தீரும்.
* இலையை விளக்கெண்ணையில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயில் கட்டி வர மூலத்தில் நெளியும் பூச்சிகள் ஒழிந்து அரிப்பு தினவு ஆகியவை தீரும்.
* இலையை அரைத்துத் தடவிக் குளிக்க சொறி, சிரங்கு தீரும்.
* இலைப்பூவுடன் வசம்பு சேர்த்து அரைத்துத் தடவி ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்க பத்துப் பதினையிந்து நாள்களில் பத்துக்கால் பேன் ஒழியும்.
* இலையை உலர்த்திப்பொடித்து 5 கிராம் 100 மி.லி. கொதி நீரில் ஊறவைத்து வடிகட்டிப் பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டு வர சளி தொடர்பான நோய்கள் அகலும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ மூலச்சூடு, இருமல், சளி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் கஞ்சாங்கோரை ~