அச்சம் நீங்கவில்லை[/size]  ![/color]
பிள்ளை.. நான் பெண்ணாக இருப்பின் 
கருவறையிலேயே கொல்ல சதி நடக்கிறது 
தப்பி பிழைத்து இப்பூவுலகிற்கு வந்தால் 
என் முதல் அழுகையை கூட அடக்கி விடுகிறார்கள் 
என் பாதுகாப்பின்மையை உணர்ந்த மானிடா..
அதனால் தான் என்னவோ  
இம்மரதினில் எனக்கு உயிர்க் கொடுத்தாய்?
குறைந்தபட்சம் இம்மரம் இருக்கும் வரை 
என் நிலையில் பெரிதும் மாற்றம் இராது 
என்று எண்ணினாய் போலும் 
அடடா மானிடா.. 
அதற்கு ஏன் என்னை உயிருள்ள மரத்தினில் செதுக்கினாய்?
எவ்வினாடி என் தாய்மரத்தை அழிப்பார்கள் 
என்று யூகிக்க கூட முடியாதே !   
---- பருஷ்ணி  
