Author Topic: இமைகளின் மௌனம்....  (Read 449 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
இமைகளின் மௌனம்....
« on: August 03, 2015, 01:46:07 PM »

" இமைகளே

உன்னில் எனை கவர்ந்ததுன் கண்களே !
உன்னில் உனையே கவர்ந்ததும் அக்கண்களே !

உன் கண்களின் கவின் கவர்ச்சிக்கு
கனக்கச்சிதமான காரணம் யாதென்றேன் ?
கணமும் யோசிக்காமல் கண்ணீர் என்கின்றாய்
எனைகேட்டால்,

உன் விழியரசிக்கு
வெண்சாமரத்தத்தின் இணையாய்
கருஞ்சாமரம் வீசிடும்
துயில்கொள்ளும் தருணத்தினில்
திரைப்போர்வையாய் திறன்படும்
உன் " இமைகளே ".....


மௌனம்

சப்தங்களை மட்டுமே சம்மதித்துவந்த
என் மன சிம்மாசனத்தில்
இன்று சம்மணமிட்டபடி உன்
"மௌனம்"