Author Topic: ~ ஆதிகுடி ஆஹா வெண்ணெய் அடை! ~  (Read 374 times)

Offline MysteRy

ஆதிகுடி ஆஹா வெண்ணெய் அடை!

‘‘துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை சரிபங்கு எடுத்துக்கோங்க. பச்சரிசி கால்பங்கு வீதம் எடுத்து சரியா ஒண்ணரை மணி நேரம் ஊறவையுங்க. அதோட வரமிளகாய், உப்பு தேவையான அளவு சேர்த்து அரைச்சு, அந்த மாவில் சின்னச் சின்னதா நறுக்கிய தேங்காய், கறிவேப்பிலை, பெருங்காயம், தேவைப்பட்டால் முருங்கைக் கீரை சேர்த்துக்கோங்க. தோசைச்கல்லில் தோசை சுட்டு எடுப்பதுபோல, வெண்ணெய் விட்டு எடுங்க. இதோட சுடச்சுட அவியல் தொட்டுச் சாப்பிட்டா... உடம்புக்கு அவ்வளவு நல்லது!



அசத்தல் அவியல்!

பூசணிக்காய் - அரை கிலோ, சேனைக்கிழங்கு - கால் கிலோ, புடலங்காய் - அரை கிலோ, உருளைக்கிழங்கு கால் கிலோ, சௌசௌ - கால் கிலோ, வாழைக்காய் - 2, கொத்தவரங்காய் - 100 கிராம், கேரட் - கால் கிலோ எடுத்துக்கோங்க. சீரகம் - 10 கிராம், தேங்காய்த் துருவல் - 1 கப், பச்சை மிளகாய் 100 கிராம், கறிவேப்பிலை - தேவையான அளவு, புளிப்பில்லாத தயிர் - ஒரு கப், தேங்காய் எண்ணெய் - 100 மில்லி எடுத்துக்கோங்க (இது, குறைந்தபட்சம் 10 அல்லது 12 பேருக்கு அவியல் செய்றதுக் கான அளவு).
காய்கறிகளைத் தண்ணீரில் நல்லா கழுவி, நீளவாக்கில் நறுக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து,  தண்ணீரை வடிச்சுக்கோங்க. வேகவைத்த காய்கறிகளை மீண்டும் அடுப்பில் வைத்து... சீரகம், தேங்காய், பச்சை மிளகாய் அரைத்த கலவையை விட்டு, நல்லா கொதி வந்த பிறகு இறக்குங்க. பிறகு கறிவேப்பிலை, தயிர், உப்பு சேர்த்துக் கலக்குங்க. கடைசியா தேங்காய் எண்ணெயை விட்டுக் கலக்கினா... அவியல் ரெடி!
- புன்னகையுடன் நிறைவு செய்தார் கண்ணன்.
‘ஆதிகுடி’... இப்போது உங்கள் அடுப்படியிலும்!