Author Topic: ~ கிராமத்து கறி குழம்பு ~  (Read 364 times)

Offline MysteRy

கிராமத்து கறி குழம்பு



தேவையான பொருட்கள்

1. ஆட்டுகறி – 3/4 கிலோ
2. வெங்காயம், பொடியாக நறுக்கியது – 1 (அ) சின்ன வெங்காயம் – 10
3. தக்காளி, பொடியாக நறுக்கியது – 1
4. கறிவேப்பிலை, கொத்தமல்லி
5. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு – தாளிக்க
6. மிளகாய் வற்றல் – 10
7. தனியா – 1 மேஜைக்கரண்டி
8. மிளகு – 2 தேக்கரண்டி (விரும்பினால்)
9. பட்டை, லவங்கம்
10. கசகசா – 1 தேக்கரண்டி
11. ஏலக்காய் – 1 (விரும்பினால்)
12. தேங்காய், பொடியாக நறுக்கியது – 1/4 கப்
13. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
14. உப்பு
15. பூண்டு – 5 பல்
16. சோம்பு – 1/2 தேக்கரண்டி (விரும்பினால்)

செய்முறை

கறியை தனியாக தண்ணீர் சிறிது விட்டு வேக விடவும். கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல், தனியா, மிளகு எல்லாம் தனி தனியாக வறுத்து வைக்கவும்.
இதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, கசகசா, தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
பாத்திரத்தில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பின் வேக வைத்த ஆடுக்கறியை அந்த தண்ணீருடன் தக்காளியுடன் சேர்க்கவும்.
இதில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், தண்ணீர், உப்பு சேர்த்து எண்ணெய் திரண்டு வரும்வரை கொதிக்க விடவும்.
கடைசியில் எண்ணெயில் வறுத்த கறிவேப்பிலை, கொத்தமல்