Author Topic: ~ காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள் :- ~  (Read 737 times)

Offline MysteRy

காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள் :-



* இன்பமோ, துன்பமோ எது வந்தாலும் கடவுளின் திருவடியை மறப்பது கூடாது.

* கோபத்தால் பிறருக்கு ஏற்படுவதை விட நமக்கே அதிக தீமை உண்டாகிறது.

* போட்டி பொறாமை இருக்கும் உள்ளத்தில் மனநிறைவு இல்லாமல் போய் விடும்.

* மனம் எதில் தீவிரமாக ஈடுபடுகிறதோ, அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது.

* தேவைகளை அதிகமாக்கிக் கொண்டே செல்லக் கூடாது. இருப்பதில் திருப்தி கொள்வதே சிறந்தது.

* நல்ல மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் வெளிப்படுத்துவதே சத்தியம்.