Author Topic: ~ சாப்பிடும் முன் தண்ணியே குடிக்காதீங்க….! ~  (Read 427 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227477
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சாப்பிடும் முன் தண்ணியே குடிக்காதீங்க….!



என்னங்க ஆணியே புடுங்க வேணாம்னு சொல்ற மாதிரி தண்ணியே குடிக்காதீங்கன்னு சொல்றோம்னு கேக்குறீங்களா.. நாங்க சொல்றது.. டாஸ்மாக் தண்ணி இல்லைங்க.. சாப்பிடும் போது தண்ணி குடிக்கிறத பத்தி.

அதாவது, பசி வந்து, சாப்பிடப் போவதற்கு முன்பும், சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதும் தண்ணி குடிக்க வேணாம்னு சொல்வாங்கல்ல.. அதுதான் ஏன்னு சொல்லப் போறோம். எத்தனை பேர் இத சொல்லிட்டாங்கன்னு நினைக்காதீங்க.. நல்லத சொன்ன கேட்டுக்கோங்க..

அதாவது, தண்ணிங்கறது உடலுக்கு ரொம்ப முக்கியம். எப்படி உலகமே தண்ணீரால சூழப்பட்டிருக்கோ, அதுபோலத்தான் நமது உடலும் தண்ணீரால சூழப்பட்டிருக்கு. எனவே, அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்தான் இல்லைன்னு சொல்லலை. நாங்க சொல்றது சாதாரண குடிதண்ணிய..

அதே சமயம், சாப்பிடும் முன் தண்ணி குடிக்காதீங்க.. ஏன்னா. பசி என்ற ஒரு உணர்வு வரும் போது, நமது இரைப்பையில், உணவை செரிமானம் செய்வதற்கான அமிலங்கள் சுரந்து தயார் நிலையில் இருக்கும்.

அப்போ நீங்க உங்க சாப்பாட்டை வாய் வழியாக மென்று வயிற்றுக்குள் அனுப்பினால், அங்கே தயாராக இருக்கும் அமிலங்கள் உணவை செரிமானம் செய்து, அதில் இருக்கும் சத்துக்களை உறிஞ்சிக் கொள்ள ஏதுவாக சிறுகுடலுக்கு அனுப்பி வைக்கும்.

இவ்வாறு செய்யும் போது உணவு உரிய நேரத்தில் செரிமானம் செய்யப்படுகிறது. உணவில் இருக்கும் சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கிறது.
ஆனால், பசி உணர்வு வந்த பிறகு, ஒரு டம்ளர் தண்ணீரை குடித்து விட்டால் போதும். அந்த அமிலம் எல்லாம் பொசுக்குன்னு போய் விடும். ஆமாங்க… அமிலங்கள் எல்லாம் அதனோட தன்மையை இழந்துவிடும். அப்புறம் நீங்க உங்க உணவை இரைப்பையில் போட்டால், அதை செரிமானம் செய்வது மிகவும் கடினம். உணவு செரிமான நேரத்தையும் தாண்டி இரைப்பையிலேயே இருந்து விடவும் வாய்ப்பிருக்கு.

மேலும், உணவில் இருக்கும் முழுச் சத்தும் உடலுக்குக் கிடைக்காது. எனவே, இனிமே சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிடும் போதும் தண்ணியே குடிக்காதீங்க. சாப்பிட்ட பிறகு தேவையான அளவுக்கு தண்ணி குடிங்க.. இதுவும் செரிமானத்துக்கு நல்ல பலனை அளிக்கும்.

முக்கியமா ஒண்ணு சொல்ல மறந்துட்டோமே… இப்போ உங்களுக்கு பசிக்குது… ஆனா, சாப்பாடு ரெடியாகலை, சாப்பிட முடியாது, சாப்பிட நேரம் இல்லை என்றால் என்ன செய்யணும் தெரியுமா.. உடனே ஒரு டம்ளர் தண்ணிய எடுத்துக் குடிச்சிடுங்க… ஏன்னா.. உணவை செரிமானம் செய்ய காத்திருக்கும் அமிலங்கள், கொஞ்ச நேரம் பொறுத்திருக்கும். அப்புறமும் சாப்பாடு வரலைன்னா, உங்கள் இரைப்பையையே சாப்பிட்டுடும்ங்க.. அதனால தான் பலருக்கும் அல்சர் வருது…
சோ… தண்ணி குடிங்க.. ஆனா குடிக்காதீங்க…