Author Topic: ~ சிந்தனை துளிகள்..... ~  (Read 861 times)

Offline MysteRy

~ சிந்தனை துளிகள்..... ~
« on: August 27, 2014, 09:37:56 PM »
சிந்தனை துளிகள்.....




1. உங்கள் அனுமதியில்லாமல் நீங்கள் கொண்டிருக்கும் அமைதியை யாராலும் குலைக்க முடியாது.

2. உங்கள் வளர்ச்சியை மற்றவர்களால் தற்காலிகமாகத்தான் தடை செய்ய முடியும். அது நிரந்தரமாக நின்றுபோனால் அதற்கு நீங்கள்தான் காரணமாக இருப்பீர்கள்.

3. நீங்களாக நின்றுவிடும்போதுதான் வெற்றியோ வளர்ச்சியோ நின்றுபோகிறது.

4. ஒரு சிக்கலில் இருந்து நீங்கள் தப்பிக்க நல்ல வழி, அதைத் தீர்ப்பதுதான்!

5. பயன்படும் விதமாக வடிவமெடுக்கும் வரையிலும், பகிர்ந்து கொடுக்கும் வரையிலும் நீங்கள் கொண்டிருக்கும் எந்தத் திறமையும் பயனற்றதுதான்.

6. வாழ்க்கையிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விசித்திர ரகசியம் என்ன தெரியுமா? “எடுப்பவர்கள் இழக்கிறார்கள். கொடுப்பவர்களே பெறுகிறார்கள்”.

7. வெற்றி ஒரு கைக்குழந்தை. நீங்கள் சிரித்த முகத்துடன் இருந்தால், உங்களிடம் தாவிக்கொண்டு வருகிறது.

8. ஒவ்வோர் ஒப்பந்தத்திலும் நீங்கள் தேட வேண்டியது, வாய்ப்பைத் தானே தவிர உத்திரவாதத்தை அல்ல!!

9. நீங்கள் ஒன்றைத் தொடங்காதவரை, சென்றடைவது எப்படி?

10. நீங்கள் வாழும் வாழ்விலேயே மிகவும் சுவாரசியமான காலகட்டம்… நிகழ்காலம்தான்!!

11. சில விஷயங்கள் தவறாய்ப் போகலாம். நீங்களும் அதனோடு போகாதீர்கள்.

12. நிகழ்ந்திருப்பவற்றிலேயே நிகரற்ற அதிசயம்… நீங்கள்தான்!!

Offline MysteRy

Re: ~ சிந்தனை துளிகள்..... ~
« Reply #1 on: September 09, 2014, 09:20:11 PM »
சிந்தனை துளிகள்.....




1] பிறரைச் சீர்திருத்தும் பணியைவிட, தன்னைச் சீர்திருத்துவதே முதல் கடமை.

2] பகைவனின் புன்சிரிப்பைவிட, நண்பனின் கோபம் நல்லது.

3] கடமையைச் செய்ய முயலுங்கள், அப்போது தான் உங்களின் தகுதியை அறிந்து கொள்ள முடியும்.

4] விவேகம் உள்ளவனுக்கு இன்பமும் இல்லை,துன்பமும் இல்லை.

5] தொடர்ந்து ஆர்வம் கோண்டிரு; கண்டிப்பாக் முன்னேற்றம் வந்தே தீரும்.

6] தண்ணீர் வெந்நீரானாலும், நெருப்பை அணைக்கும்.

7] சொர்க்கமும்,நரகமும் உன் உள்ளத்தில் இருக்கிறது.

8] சேற்றில் விழுவது ஒன்ரும் இழிவில்லை. அங்கேயே கிடப்பதுதான் இழிவு.

9] இளமை புண்ணியமும் இல்லை, முதுமை பாவமும் இல்லை.

10] நாற்பது என்பது இளமையில் முதுமை, ஜம்பது என்பது முதுமையில் இளமை.

11] உண்மை பலம் வாய்ந்ததாக இருப்பதால்,ஜெயிக்கிறது.

12] உண்மையைத் தவிர,வேறெதுவுமே அழகில்லை.

13] நேரம் விலை உயர்ந்தது,ஆனால் உண்மை நேரத்தை விட விலை உயர்ந்தது.

Offline MysteRy

Re: ~ சிந்தனை துளிகள்..... ~
« Reply #2 on: September 10, 2014, 08:32:30 PM »
சிந்தனை துளிகள்




* மீன் கொத்திப்பறவை போன்று உலகத்தில் வாழ்ந்திருங்கள். அது நீருக்குள் இருக்கின்றவரை அதன் சிறகுகளில் நீர் ஒட்டிக் கொண்டிருக்கும். வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கியதும் ஒட்டிக் கொண்டிருந்த நீர் அகன்றுபோய்விடும். அதுபோல உலகஆசைகளை விட்டுவிடப் பழகிக் கொள்ளுங்கள்.

* மக்கள் பெரும்பாலும் புகழுக்காகவோ, புண்ணியத்தை தேடவோ பிறருக்கு உதவி செய்ய எண்ணுகின்றனர். அத்தகைய உதவிகள் அனைத்தும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை.

* ஆசைகளில் பணத்தின் மீது கொண்ட பற்றும், காம எண்ணங்களும் அனைவரின் மனதையும் ஆட்டிப்படைக்கின்றன. இந்தநோயைப் போக்க வேண்டுமானால் அடிக்கடி நல்லவர்கள் கூடும் சத்சங்கம் ஒன்றுதான் வழி.

* பணத்தை ஏராளமாகச் சம்பாதித்தவர்கள் தங்களுடைய செல்வத்தை சொந்த சுக சவுகர்யங்களுக்காகச் செலவிடுவது போல, கஷ்டப்படுகின்ற ஏழைகளுக்காகவும் செலவழிப்பதற்கு முன்வரவேண்டும்.

* உலகில் மக்கள் எத்தனையோ துன்பங்களுக்கு ஆளானபோதும், ஆசைகளை அடக்குவதில்லை.ஒட்டகம் முட்செடியைத் தின்னும் போது வாயில் ரத்தம் வழிந்தாலும் தன் செயலை அறியாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்.

* செடி ஒன்று பெரிய மரமாகிவிட்டால், அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையை அம்மரத்தில் கட்டும் அளவுக்கு மரம் வலிமை பெற்றுவிடும். அதுபோல, உள்ளத்தில் பக்குவம் வந்து விட்டால் வெளியுலக விஷயங்கள் ஒருவனை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை.

Offline MysteRy

Re: ~ சிந்தனை துளிகள்..... ~
« Reply #3 on: September 13, 2014, 07:58:26 PM »
சிந்தனை துளிகள்.....




வார்த்தை

* ஒரு கவனக் குறைவான வார்த்தை ,சர்ச்சையில் முடியும்.

* ஒரு கடுமையான வார்த்தை ,வாழ்க்கையை முறிக்கும்.

* ஒரு கசப்பான வார்த்தை ,வெறுப்பை வளர்க்கும்.

* ஒரு கொடுமையான வார்த்தை,துடித்துச் சாகடிக்கும்.

* ஒரு இனிமையான வார்த்தை,நல வாழ்வைக் கொடுக்கும்.

* ஒரு சந்தோசமான வார்த்தை,ஒளியைக் கொடுக்கும்.

* ஒரு நேரமறிந்து கூறும் வார்த்தை,கடுமையைத் தணிக்கும்.

* ஒரு அன்பான வார்த்தை பாசத்தை வளர்க்கும்.

Offline MysteRy

Re: ~ சிந்தனை துளிகள்..... ~
« Reply #4 on: September 25, 2014, 07:42:35 PM »
சிந்தனை துளிகள்...




1."கடன்காரன் " ஆவதை விட" பிழைக்கத் தெரியாதவன் "எவ்வளவோ மேல் .

2."டை" கட்டிய பணக்காரனை விட "கை" கட்டாத ஏழை எவ்வளவோ மேல் .

3."கெட்டவன்" ஆவதைவிட "கையாலாகாதவன்" எவ்வளவோ மேல் .

4."வல்லவன்" ஆவதைவிட " நல்லவன்" எவ்வளவோ மேல் .

5.குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல் .

6."காதலி" க்காக உயிரை விடுபவனை விட "கட்டியவளை " காதலிப்பவன் எவ்வளவோ மேல் .

7.புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் "ஹீரோ"வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த "காமெடியன்" எவ்வளவோ மேல் .

8.மாதர்தம்மை இழிவு செய்யும்" மதயானைகளை"விட நெறி தவறாத "எறும்பு" எவ்வளவோ மேல் .

9.வெற்றிகளி ன் "கர்வங்களை" விட தோல்வியிலும் "நம்பிக்கை" எவ்வளவோ மேல் .

10.பொய்யான "புரட்சி" களைவிட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல் .