Author Topic: ~ உலகம் புகழும் பொன்மொழிகள்:- ~  (Read 609 times)

Offline MysteRy

உலகம் புகழும் பொன்மொழிகள்:-




1)படித்தவனிடம் பக்குவம் பேசாதே, பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.

2) மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்.

3) உழைப்புக்கு என்றும் மரியாதை உண்டு.

4) வாய்ப்பு ஒரு முறைதான் வரும், இனி வாய்ப்பைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும்.

5) பகைவரையும் நண்பனாக கருது, பண்பாளன் தான் உலகை வய்ப்படுத்த முடியும்.

6) ஆசைகள் வளர வளர அவனுடய தேவைகள் வளர்ந்து கொண்டே போகும்.

7) எவ்வளவு குறைவாகப் பேச முடியுமோ அவ்வளவு குறைவாகப் பேசு.

8) மரண பயம் வாழ்நாளைக் குறைத்து விடும்.

9) கோபத்தில் வெளிவரும் வார்த்தைகள் அர்த்தமற்றவை.

10) அதிகம் வீணாகிய நாட்களில் நாம் சிரிக்காத நாட்கள் தான் அதிகம்.