என்னென்ன தேவை?
கடலை மாவு - 500 கிராம்,
பொடியாக உடைத்த முந்திரி,
பிஸ்தா, பாதாம் - தலா 50 கிராம்,
மிகப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - தேவையான அளவு,
நெய் - 25 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
எப்படிச் செய்வது?
எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, லேசாகத் தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி, இந்தக் கலவையை 20 நிமிடங்களுக்கு வேக விடவும். நன்கு ஆறியதும், விருப்பமான வடிவங்களில் வெட்டி, சூடான எண்ணெயில் மொறு மொறுப்பாகப் பொரித்தெடுக்கவும். புளிப்புச் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன், சூடாகப் பரிமாறவும்.