உன்
கண்ண குழி சிரிப்பில்
வண்ண மீன்களைக் கண்டேன்
வண்ண மீன்களின் வருகையிலே
வானவில்லினைக் கண்டேன்
வானவில்லின் நிறத்தினிலே
மயிலின் தோகையைக் கண்டேன்
மயில் தோகையின் அழகினிலே
உன்னைப் பார்க்கிறேன்
எங்கெங்கு காணினும் நீயடா!!
என் மூச்சும் , பேச்சும் நீயடா!!
நீ நானாகி, நான் நீ யாகி,
காதல் வசப்பட்டோம்