காதல் வேண்டும் என உள்ளம் உருகினாலும்
கடமையை காரணமாக்கி காதலிக்கு தடையிட்ட மூளையோ
தோழியாய் நீ உள்நுழைந்த போது
அன்பாய் அரவணைத்தது.
“எதிரணுக்கள் ஈர்க்கும்” எனும் அறிவியலுக்கேற்ப
ஆண்தோழர்கள் பலர் இருந்தும்
பெண்தோழி நீ காட்டிய நட்பு
திணையை இருந்தும் மலையாய் தெரிந்தது
நான் கொட்டிய அன்பில் நீ பாதை மாற
உன் பாதை மாற்றமோ என் மனதை மாற்ற
தடை போட்டிருந்த கடமையை தள்ளிவைத்ததென் மூளை
தோழி நீ காதலியாய் மாற
உலகமே கையில் வந்ததாய்
துள்ளி குதித்தது உள்ளம்.
பெற்றவர் கூட பிறகென ஆக
வந்தவள் நீ முன்னென்றானாய்,
நண்பரும் கூட அந்நியனாக
உன்னை பிரிய வேண்டியதால்
காலைக்கடன்களும் பெரும் கடனானது
இரவும் பகலும் மறந்து தூக்கமும் தூரமானது
உன் குரல் தந்ததால் கைபேசியும் கடவுளானது
உயிரே நீ என ஆனதால் என் உடலையும் நான் மறந்தேன்
காரணமின்றி வந்த ஊடல்களும்
கூடலுக்கென நினைத்து குதுகலமானேன்
தென்றலான ஊடல்கள் புயலென மாறியது
ஏன் என சிந்திக்கும் முன்பே
நீ கொடுத்த காதல்,
பலி கொடுக்கும் ஆட்டிற்கு இரை கொடுத்து வளர்ப்பது போல
என மூளை கூக்குரலிட்டாலும்,
பாழாய் போன இதயம் மட்டும் நம்ப மறுத்தது,
விளையாட கரடி பொம்மை பிடிக்கும் உனக்கு என நான் அறிவேன்
ஆனால் அதை விட என் காதல் தான் பொழுதுபோக்கு என அறியேன்
நீ கத்தியின்றி குத்தி கிழித்து சென்ற பின்பும் கூட
குத்துயிராய் கிடக்கும் என் இதயத்தை
உன் நினைவுகள் கொல்ல துடிக்குதடி
உனக்கு விளையாட்டுப்பொருளாய்
இருந்த என் இதயம் இன்றோ
மறக்க முடியாமல் வெறுக்கிறது
உன்னை!!!