மங்கையரின் பாதங்களின் அமைப்பும் அதன் குணாதிசயங்களும்!
மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ் களைப் போன்று சிறந்த நிற முடையன வாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்தி ய வித்வாசகம் பொருந்தியவர்களாகவு ம், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவார் கள். புண்ணிய காரியங்களைச் செய்வதிலும் தான, தர்மங்களைச் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள்.
பாதங்கள் சிவந்த நிறமுடையன வாகவும் தசைவளம் மிக்கனவா கவும், மென்மையானவையாக வும் மழம ழப்பாகவும் நன்றாகப் படியக் கூடியனவாகவும் எப் போதும் வெது வெதுப்பானவை யாகவும், அமையப்பெற்ற பெண் கள் பெரும்பேறுகளைப் பெற்று த் திகழ்வார்கள். ·
பாதங்கள் வெண்மையாகவோ, தங்கத்தைப் போன்ற நிறமுடைய வனவாகவோ அமைந்திருக்கும் மங்கையர்கள் மகாபாக்கியசாலிக ளாகவும் கணவனுக்கு ஏற்ற நல்ல தொரு மனைவியாகவும் அன்னதா னம் செய்பவர்களாகவும் பெரியோர் களைப் பக்தியுடனும், மரியாதையு டனும் ஆதரிக்கும் நற்குணமுடைய வர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய நதிகளில் நீராடிப் புண் ணிய திருத்தலங்களுக்கும், திருக்கோயில்களுக்கும் சென்று தெய் வதரிசனம் செய்வ தில் ஆர்வமுடையவர்களாகவும் திகழ்வார்கள். சாந்த சுபாவமும், தெய்வபக்தியும்மிக்க இவர்கள், கணவரின் பணி விடைகளை அன்புடனும் பொறுப்புடனும் செய்யும் நற்குண நற்பண் புகளைக் கொண் டவர்களாகவும் இருப்பார்கள். ·
பாதங்கள் முரடாகவும் கெட்டியாக வும் நிறம் மாறியும் காணப்படு வது போகவிச்சை குறைவைக் குறிப்பதா கும். வெண்மை நிறத்துடனும், கோ ணலாகவும், வறண்டும் காணப்படு வது வறுமையைக்குறிக்கும். வெண் மை நிறமாகவும் சமமில்லாமலும் கல்லைப் போன்று கடினமாகவும் இருந்தால் துன்பங்கள் அதிகமாகும். கருமை நிறமாக இருப்பின் நல்ல அமைப்புகளைக் கெடுத்துவிடும். ·
பாதங்களைப் பச்சை இலையின் பழுப்பு நிறமுடையதாகப் பெற்றவர்கள் கொடூ ர மனமுடையவர்களாகவும், நல்லோ ரைப் பழிப்பவர்களாகவும் தெய்வ நம்பி க்கையற்றவர்களாகவும, நாத்திகம் பேசுபவர்களாகவும் இருப்பதோடு உடல் தூய்மை, மனத்தூய்மை, ஆத்ம சுத்தம் அற்றவர்களாகவும் இருப்பார்கள். ·
மென்மையான பாதங்களை உடைய மங்கையர் சகல விதமா ன சுகங்களையும் அனுபவிப்பார் கள். அவர்களின் பிறவியோகத் தால் அவர்களுடைய வயது நிரம் பிய தாய், தந்தையர் கணவர் புத்தி ரர்கள் ஆகியவர்கள் நற்பயன்க ளை அடைவார்கள். இவர்கள் எப் போதுமே நற்காரியங்களைச் செய்வதிலேயே கவனம் செலுத்துவார்கள்.
பாதங்கள் அடிக்கடி வியர்வை வடியும் படி இருப்பவர்கள். வறுமையில் உழல் வதோடு மிக அதிகமான காமவேட்கை யுடையவர்களாகவும், நடத்தை தவறக் கூடியவர்களாகவும், அற்பத்தனமான மனப் போக்கை உடையவர்களாகவும், எளிதில் ஏமாறக் கூடியவர்களாகவும் மற்றவர்களை ஏமாற்றக் கூடியவர்க ளாகவும், தன்னம்பிக்கையற்ற வெகு ளிகளாகவும் இருப்பார்கள்.
பாதங்கள் தடித்துப் பருத்திருப்பவர் களும் உள்ளங்கால் பூமியில் பதியு ம் படியாகத் தட்டையாக இருப்பவ ர்களும் மிகவும் தேய்ந்த உள்ளங் கால்களை உடையவர்களும் வீண் அபவாதங்களையும், பழிச் சொற்க ளையும் ஏற்க வேண்டியவர்களா வார்கள். வெறுப்படையும் இயல்பு ம், தயவு தாட்சண்யமற்ற மனப்போ க்கும் கொண்டவர்களா க இருப்பார்கள். ·
பாதங்கள் பள்ளமாக இருப்பவர்கள் கணவனால் சில காலம் கை விடப்பட வேண்டிய நிலையை அடைவார்கள். சிலர் பல புருஷர்களை சுக போகத்தி ற்கும், சுய தேவைப் பூர்த்திக்காகவும் நாடுபவர்களாக இருப்பார்கள். ·
உள்ளங்காலிலுள்ள ரேகைகள் தெளி வாகவும் மேல்நோக்கிச் செல்வனவா கவும் அமையப் பெற்றவர்கள். அன்பு மிக்க நல்லதொரு கணவனை யடை வார்கள்.