தேவையானவை:
சிறு பூரி – 10 (டிபார்ட்மென்ட் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்), உருளைக்கிழங்கு – 100 கிராம் (வேக வைத்து எடுத்து வைக்கவும்), வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்), புதினா, கொத்தமல்லி – தலா ஒரு கைப்பிடி அளவு, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் – 2 டீஸ்பூன் (வறுத்துப் பொடித்தது), பொடித்த வெல்லம் – 2 டீஸ்பூன், வேக வைத்த பருப்புத் தண்ணீர் – 2 கப், புளிக் கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், கறுப்பு உப்பு – 2 டீஸ்பூன், பூண்டு – ஒரு பல், க்ரீம், ஓமப்பொடி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த பருப்புத் தண்ணீர், புளிக் கரைசல், வெல்லம், உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, அதில் அரைத்த புதினா விழுதை சேர்க்கவும். இதனுடன் கறுப்பு உப்பு, சீரகத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து கரண்டியால் நன்கு கிளறி வைக்கவும்.
ஒரு கிண்ணத்தில் வேக வைத்த உருளைகிழங்கை நறுக்கிப் போட்டு அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பூரியை நொறுகிப் போட்டு, ரெடி செய்த சூப்பை ஊற்றி, மேலே சிறிது கிரீம் மற்றும் ஓமப்பொடி தூவி பரிமாறவும்.