தேவையான பொருட்கள்:
முட்டை - 4 (வேக வைத்தது)
வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
எள் - 2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
புளி சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி வேக வைத்துள்ள முட்டையை போட்டு 2 நிமிடம் வறுத்து இறக்க வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் வேர்க்கடலை, எள், தேங்காய் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, வரமிளகாய், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து 5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.
பின் மஞ்சள் தூள், சீரகப் பொடி, மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி, அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுத்து முட்டை மற்றும் புளி சாற்றினை ஊற்றி நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு, பச்சை வாசனை போனதும், இறுதியில் கரம் மசாலா சேர்த்து, 2 நிமிடம் கிளறி கொதிக்க விட்டு, இறக்க வேண்டும். இப்போது சுவையான பகாரா முட்டை மசாலா ரெடி!!!