என்னென்ன தேவை?
வரகு, கம்பு, சோளம் - தலா அரை கப்,
உளுந்து - கால் கப்புக்கும் சிறிது அதிகமாக,
துவரம்பருப்பு - ஒரு கைப்பிடி,
வெந்தயம் - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
அனைத்து தானியங்களையும் பருப்பு வகைகளையும் வெந்தயத்தையும் சேர்த்து 3 மணிநேரம் ஊற வைக்கவும். கிரைண்டரில் தோசைமாவு பதத்தில் அரைத்து உப்பு சேர்த்து 6 மணி நேரம் வைக்கவும், மெல்லிய தோசைகளாக வார்த்து தேங்காய் சட்னி, மிளகாய் பொடி, கார சட்னியுடன் பரிமாறவும்.4 தானியங்களை தோலுடனும் சேர்க்கலாம், தோலுடன் சேர்த்தால் 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அப்போதே உப்பு சேர்ப்பதால் சரியான பதத்துக்கு புளித்திருக்கும்.