Author Topic: கோதுமைப் பாயாசம்  (Read 787 times)

Offline kanmani

கோதுமைப் பாயாசம்
« on: December 20, 2012, 09:48:30 PM »
அடுப்பில் வாணலியை வைத்து நெய்விட்டு நன்கு காய்ந்ததும் முந்திரியை ஒடித்து வறுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் கோதுமை ரவையை போட்டு பொன் நிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரம் வைத்து இரண்டு ஆழாக்கு தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் ரவையைக் கொட்டி கிளறிவிடவும். ரவை நன்கு கலந்ததும் பாலை ஊற்றி இரண்டு கொதி வந்தபிறகு சர்க்கரையைப் போட்டு பதினைந்து நிமிடம் கொதிக்க விடவும். பாயாசம் தண்ணீராக இருந்தால் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவைக் கரைத்துவிட்டு இரண்டு கொதி வந்ததும், கற்பூரம் பொடித்துப் போட்டு, அதன்பின்னர் கேசரி பவுடரைக் கரைத்து ஊற்றவும். பின்னர் ஏலக்காயை உரித்துப் பொடி செய்து போட்டு, முந்திரியைச் சேர்த்து இறக்கவும்.