முதன் முதலில் நாம் விரும்பும் நபரிடம் என்ன பேசுவது?
இது உலகம் முழுவதிலும் உள்ள மனிதர்களுக்கான குழப்பமாகும். இதற்காகவும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாம் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக நாடகப் பாணியில் அல்லது கவித்துவமாக பேச பலர் முயற்சி செய்வதுண்டு.
ஆனால் இப்படிப்பட்ட முயற்சிகள் நகைச்சுவையில் வீழ்ந்துவிடும்.
கம்பீரமான இமேஜை உருவாக்குவதற்குப் பதில் ஒரு கோமாளி இமேஜை பதியவைத்துவிடலாம். என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இப்படிப்பட்டவர்களின் பேச்சு கிளர்ச்சியினை ஊட்டுவதில்லை. இயல்பான மிக எளிமையான பேச்சுக்களே போதுமானது.
இவைதான் வாழ்வோடு ஒத்துப்போக்க்கூடியவை என்கிறது ஆய்வு.
'இந்த டிரஸ் ரொம்ப அழகா இருக்கு'
'நல்லவேளை, பஸ்ல கூட்டம் அதிகமா இல்லே'
'மழை வரும் போல இருக்குதுல்ல'
'இன்னைக்கு உங்க பிரெண்ட் வரலையா?'
'ஹலோ நல்லாயிருக்கீங்களா?'
இது போன்ற மிகச் சாதாரண வார்த்தைகளே ஆரம்பத்தில் போதுமானவை.
என்ன சொல்றீங்க...? நான் சொல்றது சரிதானே?
அப்படியே உங்க கருத்துக்களையும் சொல்லுங்களேன்..!