வாழைக்காய்க் காரப்பிரட்டல்
முற்றிய சாம்பல் வாழைக்காய் -2
குழம்பு தயாரிக்க
தக்காளிப் பழம் - 4
வெங்காயம் -2
பச்சை மிளகாய்- 1
பூண்டு – 4 பல்லு
வெந்தயம் - ½ ரீ ஸ்பூன்
கடுகு - ¼ ரீ ஸ்பூன்
மிளகாய்ப் பொடி – 2 ரீ ஸ்பூன்
தனியாப் பொடி – 1 ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி - ¼ ரீ ஸ்பூன்
வறுத்து அரைத்த சோம்பு, கறுவாப் பொடி - ¼ ரீ ஸ்பூன்
புளிக் கரைசல்- தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப
கறிவேற்பிலை, மல்லித்தழை-சிறிதளவு.
பொரிக்க
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்.
செய்முறை-
வாழைக்காயைத் தோல் சீவி, தண்ணீரில் முழுதாகப் போட்டுவிடுங்கள்.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் தனித்தனியே வெட்டி வையுங்கள்.
பூண்டை பேஸ்ட் ஆக்கி வையுங்கள்.
வாழைக்காயை எடுத்து நீளவாக்கில் இரண்டாகக் கீறி எடுங்கள். அரை அங்குல அகல துண்டுகளாக வெட்டி வையுங்கள்.
தாச்சியில் எண்ணெயை விட்டு கொதிக்க, வாழைக்காயைப் போட்டு பென்னிறமாகப் பொரித்து எடுங்கள்.
ஒரு டேபிள் ஸ்பூன் ஓயிலில் கடுகு கறிவேற்பிலை தாளித்து, பூண்டு சேர்த்துக் கிளறிக் கொள்ளுங்கள். வெங்காயம் போட்டு வதக்குங்கள்.
வதங்கிய பின் பச்சை மிளகாய், வெந்தயம் சேர்த்து, தக்காளி போட்டுக் கிளறுங்கள்.
தக்காளி வெந்த பின் மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடி, உப்பு, புளித் தண்ணீர் விட்டு பொரித்த வாழைக்காயைக் கொட்டி கொதிக்க விடுங்கள்.
கொதித்து இறுக்கமாக வர கறுவாப் பொடிதூவி கிளறி,மல்லித் தழை போட்டு இறக்குங்கள்.
சாதம், அப்பம், புட்டு, சப்பாத்தி, பிரட், தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட சுவை கொடுக்கும்.
(தேங்காய்ப் பால் சேர்க்க விரும்பினால் இறக்குமுன் கட்டிப்பால் சிறிதளவு விட்டு இறக்குங்கள்.)