Author Topic: எதிர்பார்ப்பு  (Read 754 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
எதிர்பார்ப்பு
« on: October 10, 2012, 03:40:07 PM »
எவரெவரோ நடமாடும்
என் இதய தெருவில்
நடமாடுகின்றன
உன் நினைவுகளும்

கசியும்.. கண்ணீரின்
முற்றுப் புள்ளியில் இருந்து
முளைத்து கிளைக்கிறது
என் ஆற்றாமையின்
நெருப்பு செடிகள்..

நினைவின் ஆன்மா அழும்,
தனிமையை கொளுத்தி
எரிகிறது
நம் பிரிவு பிறைகள்

இல்லாத ஒரு நிறத்தை
இதழில் விளாவி
மலர்த்து விடுகின்றன
ஏக்கப் பூக்கள்..

வரவேற்பு வாசகங்களும்
ஒளிப்பந்தல்களும் இட்டு
அலங்கரித்த என் முற்றத்தில்
நீ வராமையால்
வழிந்தோடும் வெறுமையில்
கனத்து சாய்கிறது
வாடிய என் முகம்!
அன்புடன் ஆதி

Offline Global Angel

Re: எதிர்பார்ப்பு
« Reply #1 on: October 15, 2012, 02:34:29 AM »
தனிமை கொடியதுதான் .. அதிலும்  எதிர்பார்ப்பின் ஏமாற்றங்கள் தரும் தனிமை கொடியது ... இதயத்தை இறுக்கி பிடிக்கும் வரிகள் .... உறைந்து மீள்கின்றது.... வார்த்தை கொருப்கள் அருமையோ அருமை ஆதி
                    

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: எதிர்பார்ப்பு
« Reply #2 on: October 15, 2012, 01:13:24 PM »
எதிர்ப்பார்ப்பு, பிரிவு துயர் அதனால் உண்டாகும் ஆற்றாமை, அதனை எழுதுவதே ஒரு சுகம் தான், நன்றிங்க‌
அன்புடன் ஆதி

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: எதிர்பார்ப்பு
« Reply #3 on: October 16, 2012, 07:24:21 AM »
வார்த்தைகள் இன்றி ஊமையாய் என்னுள்ளம்
எனக்கு பொருத்தமான கவிதை ..
நன்றிகள் ஆதி


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Aadava

  • Guest
Re: எதிர்பார்ப்பு
« Reply #4 on: October 16, 2012, 12:32:31 PM »
எவரெவரோ நடமாடும் தெரு
ஆற்றாமையின் நெருப்புச் செடி
எரியும் பிரிவு பிறைகள்

இன்னும்....

ரசித்த வரிகள்.................

எதிர்பார்த்த எதுவுமே நடந்துவிடுவதில்லையே ஆதி. எல்லாருக்குமே எதிர்பார்ப்பின் இன்னொரு முகமான ஏமாற்றம்தான் கண்ணுக்குத் தெரிகிறது.
கவிதை எப்பொழுதும்போல நன்றாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்.

ஸ்ருதியின் கையெழுத்தில் கவர்ந்த வாசகம்...

//எதிர்பார்ப்பில்லாமல் வாழ கற்றுக்கொண்டேன். பல ஏமாற்றங்களை சந்தித்த பிறகு //

factu..factu..factu.. factu..
« Last Edit: October 16, 2012, 12:34:29 PM by Aadava »

Offline ! SabriNa !

Re: எதிர்பார்ப்பு
« Reply #5 on: October 17, 2012, 12:57:12 PM »
amazing linez ...aadhi!! keep goin....


Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: எதிர்பார்ப்பு
« Reply #6 on: October 18, 2012, 02:57:53 PM »
பின்னூட்ட ஊக்கம் வழங்கிய ஸ்ருதி, ஆதவா, சர்மி அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
அன்புடன் ஆதி

Offline Anu

Re: எதிர்பார்ப்பு
« Reply #7 on: October 19, 2012, 10:48:15 AM »
எவரெவரோ நடமாடும்
என் இதய தெருவில்
நடமாடுகின்றன
உன் நினைவுகளும்
nice lines aadhi.
nice kavithai.
edirpaarpunnu onnu irundha adhuku opposite emaatramnu onnu irukum thaane.
iyarkaiyin niyadhi appadi thaane iruku ..