ஊருக்குள் ஒளிந்து
இருக்கும் திருடனை
நீ அறிவாய்
உனக்குள் ஒளிந்து
இருக்கும் திருடனை
நான் அறிவேன்...
என்றும் வாடாத
மலராய் நீ இருக்கிறாய்
உனக்காகவே வாடிய மலராய்
அவன் இருக்கிறான்..
ஏன் தெரியுமா
உன் தோல்வி அவனுக்கு
மரண அடியாம்...
எனை கேட்கலாம்
நீ யார் என்று..
நான் சொல்வேன்
உன் மனதின் சாட்சி(மனசாட்சி) என்று.. !!