Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
நண்பர்கள் இணையதள பொதுமன்றம் உங்களை வரவேட்கிறது ,உங்களை பொது மன்றத்தில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளவும்,
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
அழாதே என் ராசாத்தி...
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: அழாதே என் ராசாத்தி... (Read 624 times)
Anu
Golden Member
Posts: 2463
Total likes: 50
Total likes: 50
Karma: +0/-0
அழாதே என் ராசாத்தி...
«
on:
September 21, 2012, 01:44:09 PM »
ஆத்தா களையெடுக்க போயிருக்காளோ
அய்யா ஆடு மேய்க்க போயிருக்காரோ
மாமன் மம்பட்டி பணி செய்கிறானோ
அக்கா கீரை தேடி போயிருக்காளோ
மழை பெய்த ஈரம் இன்னும் காயலையே
ராசாத்தி உன் வயிறு நிறைய
கஞ்சி வந்து இன்னும் சேரலையே !
பாவம் ஒன்னும் செய்யலையே ராசாத்தி
என் பார்வையற்ற தேசத்தில் பிறந்ததைவிட!
உனக்கொரு செய்தி சொல்ல வந்திருக்கேன்
ராசாத்தி...!
உன் செவி மட்டுமே இங்கு திறந்திருப்பதால் !
நீ தேடி வந்த
மாகாத்மா கூட கொன்றுவிட்டோம்
உன் பாதம் இங்கே படும் முன்னே !
கோவில் எல்லாம் குவிஞ்சு போச்சு
குளம் மட்டும் குட்டையா போச்சு !
மலையில கூட மரங்கள் இல்லை
தலையிலும் காகித பூக்கள் தான் !
ஆட்டு புழுக்கைய போல
அரசியல் கட்சிகள்
மக்களுக்கு வேட்டு வைக்கிறதுல
எம்.ஜி.ஆரின் எதிரி நம்பியார் போல
அகிம்சையாளன் கூட
ஆதாயம் எங்கே என்கிறான்
மொழிகளில் கலப்படம்
கட்டாயம் என்றாகிவிட்டது
நதிகளை இணைக்க நாதியில்லை
நடிகைகளை அணைக்க துடித்திடும்
நாட்டாளுபவர்கள் பலர்
நரிகளும் இங்கே காவியணிந்தபின்
ஏற்றுக்கொள்ளபடாத கடவுளும்
காணாமல் போனவர்கள் பட்டியலில்
சிறுவர் பூங்காக்கள்
சிற்றுண்டிகளாக்கப்பட்டன
குட்டி சுவற்றில் குடியிருப்போர்
எண்ணிக்கை இன்னும் இங்கே தாழவில்லை
தட்டி கேட்டோர் தளர்ந்த போக்கினால்
அகதியாய் வந்த யுவதிகளை
சகதியாய் பிளிந்து போன அதிகாரிகள் இன்னும்
ஆண்மையோடுதான் இருக்கிறார்கள்
காதல் முன்னே கள்ளம் வந்தது
காட்சி பிழைகள் ஏராளமானது
ஏட்டில் பாட்டி மருத்துவம் எழுதியென்ன
படிக்க தெர்ந்தும் படிக்காத பலர்!
செல்வியினை தட்டிகேட்டிட
கொட்டிடாத முரசு இங்கே
மனிதாபிமானமும் கற்பு இழந்துவிட்டது
கண்ணகியே வாழ்ந்திருந்தாலும்
கணவனின் சந்தேகம் சாடாமல் இருந்திருக்காது
நிழல் தேடும் பலர் இங்கே
நிழல் தர ஏனோ முன் வருவதேயில்லை
தினம் தினம் ஒரு தினம் போல
சுதந்திர தினமும் ஆயிற்றே...
முள்ளுச்செடு வளரது கண்ணே
தேசம் எட்டு திசைகளிலும்
ஆழ உழுது வித்திடுகிறேன் கண்ணே
ஆலமரமாய் வளர்ந்திடுவாயென்னி !
எழுத்தாளர்
மணிகண்டன்
Logged
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 593
Total likes: 593
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: அழாதே என் ராசாத்தி...
«
Reply #1 on:
September 21, 2012, 01:52:57 PM »
Quote
நரிகளும் இங்கே காவியணிந்தபின்
ஏற்றுக்கொள்ளபடாத கடவுளும்
காணாமல் போனவர்கள் பட்டியலில்
அருமை அனும .... அவலங்கள் பல ... அதை அழகாக எடுத்தியம்பும் இந்த கவிதை மிக நன்று பகிர்வுக்கு நன்றிகள்
Logged
Anu
Golden Member
Posts: 2463
Total likes: 50
Total likes: 50
Karma: +0/-0
Re: அழாதே என் ராசாத்தி...
«
Reply #2 on:
September 21, 2012, 02:03:36 PM »
nandri rose dear
Logged
Thavi
Sr. Member
Posts: 383
Total likes: 24
Total likes: 24
Karma: +0/-0
உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: அழாதே என் ராசாத்தி...
«
Reply #3 on:
September 23, 2012, 03:20:58 PM »
Logged
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..
Anu
Golden Member
Posts: 2463
Total likes: 50
Total likes: 50
Karma: +0/-0
Re: அழாதே என் ராசாத்தி...
«
Reply #4 on:
September 23, 2012, 09:10:05 PM »
Quote from: Thavi on September 23, 2012, 03:20:58 PM
nandri thana:)
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கவிதைகள்
(Moderator:
MysteRy
) »
அழாதே என் ராசாத்தி...