Author Topic: இன்று வானில் புளூ மூன் அரிய காட்சி  (Read 5184 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 119
  • Total likes: 119
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இன்று வானில் புளூ மூன் அரிய காட்சி

புதுடில்லி : ஒரே மாதத்தில் இரண்டு முழுநிலவு (பெளர்ணமி) தோன்றும் நிகழ்வு, இந்த ஆண்டில் நிகழ்ந்துள்ளது. ஆண்டின் ஒவ்வொரு மாதமும் ஒரு பெளர்ணமி மற்றும் ஒரு அமாவசை வரும். ஆனால், இந்தாண்டின் ஆகஸ்டு மாதத்தில், 2 பெளர்ணமிகள் மற்றும் 2 அமாவசைகள் வருகின்றன. இன்று இம்மாதத்தின் இரண்டாவது முழுநிலவு (பெளர்ணமி) தினம் ஆகும். இந்த முழுநிலவை, அறிவியல் அறிஞர்கள் புளூ மூன் என்று பெயரிட்டுள்ளனர். இதே‌போன்றதொரு நிகழ்வு, அடுத்து 2015ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி நிகழ உள்ளதாக அறிவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்