Author Topic: அணி இலக்கணம் - தமிழின் அழகு.  (Read 7352 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
அணி இலக்கணம்:

அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணம். அணி பலவகைப்படும். அணி இலக்கணம் கூறும் தொன்மையான நூல் தண்டியலங்காரம் ஆகும். இந்நூலில் தன்மை அணி முதல் பாவிக அணி வரை 35 வகையான அணிவகைகள் பற்றி கூறப்படுகின்றது. அவற்றுள் சில,

பொருள் அணிகள்

1. அதிசய அணி
2. அவநுதியணி
3. ஆர்வமொழியணி
4. இலேச அணி
5. உதாத்த அணி
6. ஏது அணி
7. ஒட்டணி
8. ஒப்புமைக் கூட்ட அணி
9. ஒழித்துக்காட்டணி
10. சங்கீரண அணி
11. சமாகித அணி
12. சிலேடையணி
13. சுவையணி
14. தற்குறிப்பேற்ற அணி
15. தன்மேம்பாட்டுரை அணி
16. தன்மையணி
17. தீவக அணி
18. நிதரிசன அணி
19. நிரல்நிறையணி
20. நுட்ப அணி
21. பரியாய அணி
22. பரிவருத்தனை அணி
23. பாவிக அணி
24. பின்வருநிலையணி
25. புகழாப்புகழ்ச்சி அணி
26. புணர்நிலையணி
27. மயக்க அணி
28. மாறுபடுபுகழ்நிலையணி
29. முன்ன விலக்கணி
30. வாழ்த்தணி
31. விசேட அணி
32. விபாவனை அணி
33. விரோக அணி
34. வேற்றுப்பொருள் வைப்பணி
35. வேற்றுமையணி

சொல் அணிகள்

1. எதுகை
2. மோனை
3. சிலேடை
4. மடக்கு
5. பின்வருநிலை
6. அந்தாதி



1. இரட்டுறமொழிதல் அணி(சிலேடை)
2. இல்பொருள் உவமையணி
3. உயர்வு நவிற்சி அணி
4. உருவக அணி
5. உவமையணி
6. எடுத்துக்காட்டு உவமையணி
7. தன்மை நவிற்சி அணி
8. பிறிது மொழிதல் அணி
9. வஞ்சப் புகழ்ச்சியணி




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இரட்டுறமொழிதல் அணி (சிலேடையணி):
ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுறமொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடையணி என்றும் அழைப்பர். ஒரு சொல் பிரிபடாமல் தனித்துநின்று பல பொருள் தருவது செம்மொழிச் சிலேடை என்றும் , சொற்றொடர் பல வகையாகப் பிரிக்கப்பட்டுப் பல பொருள்களைத் தருவது பிரிமொழிச் சிலேடை என்றும் பெயர் பெறும்.
எடுத்துக்காட்டு

திருக்குற்றாலக் குறவஞ்சியில் உள்ள பின்வரும் பாடலில் இவ் அணியைப் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம்.

மீறும் அலஞ்சிக் குறத்தியைக் கொண்டசெவ்
வேட்குற வன்முதல் வேட்டைக்குப் போனநாள்
ஆறுநாட் கூடி ஒருகொக்குப் பட்டது
அகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில்
சாறாக வைத்தபின் வேதப் பிராமணர்
தாமுங் கொண் டார்சைவர் தாமுங் கொண்டார்தவப்
பேறா முனிவரும் ஏற்றுக்கொண் டார்இதைப்
பிக்குச் சொல்லாமலே கொக்குப் படுக்கவே (கண்ணி)

விளக்கம்

குற்றாலத்தில் பறவைகள் பெரும் எண்ணிக்கையில் வலசை வந்து மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் சிங்கன் அப்பறவைகளைப் பிடிப்பதற்காகத் தன் நண்பனைக் கண்ணி கொண்டுவரச் சொல்கிறான். இவ்வாறு செய்வதில் தவறில்லை எனச்சொல்லும் வகையில் அமைந்த இப்பாடலின் நேரடிப் பொருள் பொதுவான அறிவுக்கு ஒவ்வாததாக அமைந்திருந்தாலும் அதன் உள் மறைபொருள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக அமைந்துள்ளது. இப்பாடல் இவ்வகையில் நயத்துடன் அமைந்துள்ளது.

நேரடியான பொருள்

வடிவழகிலே அனைவரையும் மிஞ்சும் இலஞ்சி நகர்க் குறத்தியின் மணாளன், செவ்வேளாகிய குறவன் தனது முதல் வேட்டைக்குச் சென்றான். அம்முறை ஆறு நாட்களுக்குப் பின்னர்தான் அவனுக்கு ஒரு கொக்கு அகப்பட்டது. அதை அவித்து ஒரு சட்டியிலே குழம்பாகச் சமைத்தான். அதனை மறையோதும் பிராமணர்களும், சைவர்களும் உண்டனர். தவப்பேறுடைய முனிவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர். அதனால் மறுப்பேதும் சொல்லாமல் வேட்டையாடுவதற்குக் கண்ணியை எடுத்துக்கொண்டு வாடா குளுவா!

உட்பொருள்

முருகன் (குறவன்) சூரனாகிய மாமரத்தைத் (கொக்கைத்) தான் படையெடுத்துச் சென்ற ஆறாவது நாளில் வென்றான். அது சட்டித் திருநாள் எனப்படும். சாறு என்றால் திருவிழா எனும் பொருளும் உண்டு. அச்சட்டித்திருநாளை அனைவரும் கொண்டாடுவர். இவ்வாறான உட்பொருளைக் கவிஞர் சுவைபட உரைத்துள்ளார்.


மற்றும் ஒரு பாடல் விளக்கம்:

இரண்டு பொருள்படக் கூறுதல் சிலேடை எனப்படும். தமிழில் “இரட்டுற மொழிதல்” என வழங்குகிறோம்.

வாரிக் களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும்
போரில் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல மேனித் திருமலை ராயன்வரையில்
வைக்கோலும் மால்யானை ஆம்.
காளமேகப்புலவர்

(போர்க்களத்தில் பகைவரை வாரிக் கொன்று போரில் சிறந்து விளங்கும் யானை கோட்டைக்குள் புகுவது போல், நெற்களத்தில் கதிர்கள் வாரி அடிக்கப்பட்டு பின் நெற்கோட்டையில் போராய் பொலிவுற்று விளங்குவதால் வைக்கோல் யானைக்கு ஒப்பாகும்)




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
    உருவக அணி என்பது அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது. உவமை அணியின் மறுதலை.

    எடுத்துக்காட்டு

    இதுதான் அது.
    அவளின் முகம்தான் சந்திரன்.

    * பச்சை மாமலை போல் மேனி - இது உவமை அணி.
    * மையோ மாமலையோ மறிகடலோ - இது உருவக அணி

    இதில் கண்ணனை மை, மாமலை, மறிகடல் என உருவகிக்கப் படுகிறது. மை போன்ற மேனி என்று சொல்லியிருந்தால் இது ஒரு உவமையணி. ஆனால் மையோ என்னும் போது அவன் மேனிதான் மை என்று சொல்லியாயிற்று. இது உருவக அணி.

    எடுத்துக் காட்டுகள்

    * உவமை அணி - மதிமுகம் (மதி போன்ற முகம்)
    * உருவக அணி - முகமதி (முகம்தான் மதி)

    * உவமை அணி - புலி போன்ற வீரன் வந்தான்
    * உருவக அணி - புலி வந்தான்

    * உவமை அணி - மலர்க்கை (மலர் போன்ற கை)
    * உருவக அணி - கைமலர் (கைகள்தான் மலர்)

    * உவமை அணி - வேல்விழி (வேல் போன்ற விழி)
    * உருவக அணி - விழி வேல் (விழிதான் வேல்)





உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்