Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
தினமும் காது குடைந்து அழுக்கை எடுப்பது பெரிய தவறு....
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: தினமும் காது குடைந்து அழுக்கை எடுப்பது பெரிய தவறு.... (Read 10 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 221523
Total likes: 27223
Total likes: 27223
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
தினமும் காது குடைந்து அழுக்கை எடுப்பது பெரிய தவறு....
«
on:
June 15, 2025, 07:45:16 AM »
தினமும் காது குடைந்து அழுக்கை எடுப்பது பெரிய தவறு. நீங்கள் தினமும் காது குடைந்து அழுக்கை எடுக்கவே தேவை இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், காதில் நீங்கள் அழுக்கு என்று எண்ணி சுத்தம் செய்பவை தான் உண்மையில் காதுகளை பாதுகாக்கும் ஆண்டி-பாக்டீரியா ஆகும். எனவே, இதை முதலில் நீங்கள் சரி செய்துக் கொள்ள வேண்டும். பிறகு, காதுக்குள் தினமும் உறங்கும் போது பஞ்சை வைத்துக் கொள்வது, கண்டதை விட்டு காதுகளை நோண்டுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் தினமும் காதை குடைந்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. காதில் பெரும்பாலும் இறந்த சரும செல்கள் தான் அழுக்கு போன்று படிந்திருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இவை, லைசோசைம் (lysozyme) எனப்படும் ஆண்டி- பாக்டீரியல் என்சைம் ஆகும். உண்மையில் நீங்கள் தினமும் காதை குடைந்து சுத்தம் செய்வது காதுகளுக்கு நல்லது என எண்ண வேண்டாம். உண்மையில் இந்த லைசோசைம்கள் தான் காதுகளை பாதுகாக்கின்றன என மேலும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
உண்மையில் குளிக்கும் போது காதுகளின் மேற்புறத்தில் நீர் ஊற்றி கழுவி, மென்மையான துணியைக் கொண்டு காதின் மேற்புறத்தில் மட்டும் சுத்தம் செய்தாலே போதுமானது. சிலர் காதுக்குள் அழுக்கு போகாமல் இருக்கவும், குளிர் காலத்தின் போதும் கூட பஞ்சு வைத்துக் கொள்வார்கள். ஒருவேளை அந்த பஞ்சு காதின் உட்பகுதிக்குள் சென்றுவிட்டால் அதை மருத்துவ முறையை கையாண்டு அகற்ற வேண்டிய சூழல் ஏற்படலாம். மேலும், காதுக்குரும்பி (Ear wax) எனப்படுவதை இது காதினுள்ளே அடைப்பு போலே உண்டாக செய்கிறது. இது செவிப்பறையை பாதிக்க கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலர் காது குடைவதை சுகமான வேலையாக செய்து வருவார்கள். பேனா, கறிவேப்பிலை குச்சி, விரல் நகம், போன்றவற்றை பயன்படுத்தி காது குடைவார்கள். உண்மையில் இது சுகமாக இருப்பினும், காதின் உள்ளே இருக்கும் சருமத்தை அதிகமாக எளிதாக பாதிக்கின்றனர் என்பது தான் உண்மை.
சிலர் காதை நன்கு கழுவுகிறேன் என்ற பெயரில் காதினுள்ளே தண்ணீரை நேராக ஊற்றிக் கொள்வார்கள். ஆனால், அதே சமயம் உள்ளே ஊற்றிய தண்ணீர் முழுதுமாக காய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். இப்படி நீரை நீராக காதினுள் ஊற்றி கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லவே இல்லை.
காது குடைய பின்னூசி, பெண்கள் பயன்படுத்தும் ஹேர் பின் போன்றவற்றை தயவுசெய்து பயன்படுத்த வேண்டாம். இது செவிப்பறை மற்றும் காதின் உட்பகுதியில் இருக்கும் மிருதுவான சருமத்தில் எளிதாக கிழிசல் உண்டாக்கிவிடும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
தினமும் காது குடைந்து அழுக்கை எடுப்பது பெரிய தவறு....