Author Topic: இனியவளின் கோபம்...  (Read 1766 times)

Offline JS

இனியவளின் கோபம்...
« on: August 02, 2011, 01:15:15 PM »
எருவில்லாத செடியாய் இருந்தேன்..
காதல் என்னும் விதையை விதைத்தாள்

காட்டு மலராய் இருந்தேன்
கணக்கிலடங்கா காவியமானேன்...

இரும்பு பாறை நான்
இதயத்தில் ஓட்டையிட்டு குடிகொண்டாள்...

இத்தனை மாற்றங்கள் தந்தாய்
ஏனோ! உன் கோபம் மட்டும்
என்னை வாட்டுகிறது...

இனியவளே! வெட்கப்படு ரசிக்கிறேன்
கோபப்பட்டால் துடிக்கிறேன்

இனியவளின் கோபம் கூட வரமே
அவளிடம் கொண்ட காதலால்...
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline Global Angel

Re: இனியவளின் கோபம்...
« Reply #1 on: August 03, 2011, 02:36:32 PM »
இத்தனை மாற்றங்கள் தந்தாய்
ஏனோ! உன் கோபம் மட்டும்
என்னை வாட்டுகிறது...

inimayana unmayaa varikal .. ;)