Author Topic: ஓ கவி மேகங்களே ! எங்கே போனீர்கள் ??  (Read 570 times)

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
ஏளனம் செய்திடும் சலனமே துளியும் தெரியாதபடி
எக்காளமாய், எகத்தாளமாய்   ஒருதகவல் 
அனுப்பியவர் யார் என்றால், எதிர் மன்ற புதிர் நண்பர்.

என்ன "கவிச்சக்ரவர்த்தி" உங்கள் மன்றத்தில் (FTC )
கடும்(கவிதை) வறட்சியாமே ?? கேள்விபட்டேன்  என   
கேலி பேசுவாதாய் ஒரு கேள்வி கேட்டிருந்தார் .

படித்ததும் துடித்திருக்கவேண்டும்,துடிக்கவில்லை, ஏன்??,
துடிப்பதை போல நடிக்கவும் இல்லை, ஏன் ??
கேட்ட கேள்வியில் கேலி இருந்த அளவு, உண்மையில்
கொஞ்சம்   உண்மையும் இருந்தது, அதனால் ...
ஒப்ப மறுப்போர் நம் மன்ற புள்ளி விவர வரலாறு
(இம்மாதத்தின் ) விவரம் சரி பார்க்கலாம் !

கேள்வியின் உண்மை நினைத்து முகம் சுழித்து நின்றேன்
என்ன பதில் உரைப்பது என தெரியாமல்,புரியாமல்
விழித்து நின்றேன் ,

என்ன இருந்தும் , என் மன்றம் என் மக்கள் ஆயிற்றே !
அதே புள்ளிவிவர (கடந்தமாத) விவரம்  துணை கொண்டு
எங்கள் கவிமேகங்கள் அபரிமிதமான கவிதை மழை
பொழிந்துவிட்டமையால்  தற்காலிக சிறு ஓய்வில் உள்ளனர்
என ஒரு வழியாய் சமாளித்துவிட்டேன்  தற்காலிகமாய் .

ஓ கவி மேகங்களே ! எங்கே போனீர்கள் ??
« Last Edit: June 09, 2012, 11:46:33 AM by aasaiajiith »

Offline supernatural

பெருமழை பெய்ததால் ...
வானத்தில் பெரும் நிசப்தமோ ??

நல்ல வரிகள்..புதமையான சிந்தனை...
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!