உள்ளத்தில் இருப்பதோ உண்மை காதல்...
நீ என்னிடம் சொல்லியதோ ஊமைக் காதல்..
சிந்தனை எதற்கு !!
பாசத்தைக் கொட்ட நான் உனக்கு...!!
உள்ளதை சொல்ல என்ன தயக்கம் !!
என் பேசா மலரே...
நீ சிந்திய கண்ணீர் துளிகள்
சொல்லுதடி உன் காதல்...
உன் மௌனத்தால் எனை கொல்லுகிறாய்...
உன் இல்லத்து மலர்களாய் பிறக்க ஆசையடி !!..
அதிகாலை ஒளி கூட உன்னிடம் தோற்றதடி !!..
உன் மௌனத்தில் எனை புதைத்து விடு..
என் அப்பாவி மலரே...
கொஞ்சம் உன் இயலாமையை விலக்கு
உன் தூரம் உன் அருகில் வரும்
கூண்டை விடு பறந்து வா...
உனக்கான வாழ்க்கை உன்னை வந்தடையும் !!!...