நெஞ்சம் என்னும் கோட்டையில்
உன் நினைவுகளை புதையலாக்கினேன்
நீ வேண்டாமென்று சொல்லியும்
உன் வாசலை வண்ணமயமாக்கினேன் !...
என் தேவைகளை தள்ளி வைத்து
உன் தேவைக்காக போராடினேன்...
உரு தெரியா மேகமாய் இருந்த உன்னை
வெள்ளி மலராய் அலங்கரித்தேன் !...
வஞ்சம் இல்லா உன்னை
என் நெஞ்சம் என்னும் கோட்டையில்
பட்டத்து ராணியாய் மிளிர வைத்தேன் !!...