Author Topic: இயற்கை மருத்துவம்  (Read 89 times)

Offline RajKumar

இயற்கை மருத்துவம்
« on: October 31, 2025, 11:12:57 AM »
*வாய்ப்புண், வயிற்று புண்ணுக்குகளுக்கு இயற்கை வைத்தியம்...*

*கோவைக்காய் முழுவதும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை.*

*கோவைக்காயின் கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும்.    இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.*

 *கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை. பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும்.*

*வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம். இலை மற்றும் தண்டு &கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும்.     இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.*

*கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.
« Last Edit: November 06, 2025, 10:04:21 AM by RajKumar »

Offline RajKumar

Re: இயற்கை மருத்துவம்
« Reply #1 on: November 06, 2025, 10:07:30 AM »
நெல்லிக்காயின் மகத்துவம்

   பச்சை நெல்லிக்காயை இடித்து பத்து மில்லிக்கு குறையாமல் சாறு பிழிந்து
இதனோடு இதில் பாதி அளவு
எலுமிச்சை சாறு இதனுடன் கலந்து

எலுமிச்சை சாற்றின் அளவில் பாதியளவு தேன் கலந்து இதை தினந்தோறும் காலை வேலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம் பருகி வந்தால் எந்த வைத்திய முறைக்கும் கட்டுப்படாத நாட்பட்ட சர்க்கரை நோயானது வெகு எளிதாக கட்டுப்படும்

இரண்டு அல்லது மூன்று மாதங்கள் இந்த நெல்லிக்காய் சாற்றினை பருகி வர சர்க்கரையின் அளவு எப்போதும் சமநிலையில் இருக்கும்

     நெல்லிக்காய் சாற்றினை பருகி வருவதால் கிடைக்கின்ற பயன்கள்

உடல் வெட்டைச்சூடு தணியும்
நல்ல ரத்தம் உற்பத்தியாகும்
விந்து ஸ்கலிதம் குணமாகும்
விந்து உற்பத்தி அதிகரிக்கும்

பார்வைத் திறன் உண்டாகும்
மனதில் ஏற்படும் பயம் விலகும் மனோதிடம் ஏற்படும்

உடல் வறட்சியை நீக்கி உடல் வெப்பத்தை தணிக்கும் அதிக தாகம் குணமாகும்

பித்த வாந்தி மற்றும் ரத்த வாந்தி நிவர்த்தியாகும் தலை மயக்கம் நீங்கும்

நுரையீரலுக்கு வலிமை ஏற்படும் கல்லீரல் மற்றும் மண்ணீரல் பலம் பெறும் ரத்தம் சுத்தமாகும் மேலும் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும் இதன் மூலம் சுவாச மண்டலம் சீராக இயங்கும்

எந்தவிதமான நோய்க்கிருமிகளும் சுவாசப் பாதையில் தொற்றாத வண்ணம் நமது உடலை காக்கும்

உடல் பிணிகள் அனைத்தையும் நீக்கி உடலில் நோய் வராமல் காக்கும்
ஒரு உன்னத மருத்துவம் இது

பச்சை நெல்லிக்காய் கிடைக்காத காலங்களில் இருந்பது கிராம் நெல்லி வற்றலை இடித்து இருநூறு மில்லி தண்ணீரில் கலந்து இதை ஐம்பது மில்லியாக சுண்டக் காய்ச்சி இதில் பத்து மில்லி எலுமிச்சை சாறும் ஒரு ஸ்பூன் தேனும் கலந்து பருகி வந்தால் மேலே சொன்ன அனைத்து நோய்களும் நீங்கும்.