Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 384  (Read 1208 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 384

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 484
  • Total likes: 1240
  • Karma: +0/-0
  • When u look into the abyss, the abyss looks into u
அடர்ந்த இருளின் பிசுபிசுப்பினூடே
மெல்லிய மஞ்சள் நிற ஒளி பாவிய
கைமின் விளக்குடன்
இந்த இரவில்
பேயை தேடி போனோம்
ஆம்
பேயை தேடி தான்.
தின்று கொழுத்த 
வேலையற்ற நள்ளிரவில்
'கொழுப்பெடுத்து திரியாதே'
என்ற அம்மாவின் அதட்டலை
உதாசீனப்படுத்தி
ஊரின் எல்லையிருந்த பேய் வீட்டை
தேடிப் போனோம்

'இந்த அம்மாக்களுக்கு வேற வேலை
இல்லை'
என்று பொய் சமாதானம் கூறிக்கொண்டு
தொடை நடுங்க தான் சென்று கொண்டிருந்தோம்.
'வேலையத்த வேலை பார்க்கிறதுல
நம்மளை மிஞ்ச ஆளே இல்ல'
என்று மார் தட்டிக்கொண்டு
பாழடைந்த பேய் வீட்டை
நோக்கி நடந்தோம்

ஒரு காலத்தில்
பல நினைவுகளை தின்று செரித்து
செழிப்பாய் நின்றிருந்த வீடு
இன்று
நினைவுகளின் செல்லரிப்பாய்
சிதிலமடைந்து
வாழ்ந்து கெட்டவனின் வீடாகி
நின்றிருந்தது.
நிலவொளியில்
கரியதொரு கொம்பனை
போல் நின்றிருந்த வீடே
அச்சுறுத்தலின்
ஆரம்பப் புள்ளியாய் இருந்தது

எல்லைக்கோட்டினை கடந்த போது
எங்களுக்கே எங்களுக்காய்
காத்திருந்தது போல்
கைமின் விளக்கு,
காலரா வந்தவனின்
கடைசி மூச்சு போல்
படபடத்து மொத்தமாய் அணைந்தது
'டேய் மாப்பிள போயிருவோம்டா'
என ஈனஸ்வரத்தில் முனகியவனை
'டேய் உளராதடா' என
அசட்டையாக பின் தள்ளி
முன்னே நகர்ந்தோம்

அதுவரை இல்லாத
பிண ஊதுபத்தியின் நாற்றம்
எல்லார் நாசியிலும் ஏறி
'ஓடிரு ஓடிரு' என
எச்சரித்தது.
அலட்சியத்துக்கு பிறந்த அடுத்த பிறப்பு நாங்களல்லவா
அலட்சியத்தோடே நடந்தோம்.
நரிகளின் ஊயிடல்
நடுங்க வைக்க
'மாப்பிள போயிருவோம்டா'
என மறுபடி ராகம் படித்தான் பயந்தாங்கொள்ளி நண்பன்
'பயப்படாத மச்சான்
அது நரியில்ல நாய் தான்' என
மடத்தனமான, சமாதானமற்ற சமாதானத்தோடு வீட்டை நெருங்கினோம்.

நிசப்தம் நிறைந்த அந்த பெருவெளியில்
சில்வண்டுகளின் ரீங்காரம்
கூட கொலுசொலி போல் கேட்டது.
'மாப்பள...'
அதே ஈனஸ்வரம்
அதே மடையன்
அவன் வாயை மூடி தொடர்ந்து
நடந்தோம்.
நடக்க நடக்க முடிவிலியாய்
நீண்டு கொண்டே இருந்தது
அந்த பாதை
பக்கத்தில் இருந்தும்
தூரமாய் தள்ளி போய் கொண்டே இருந்தது அவ்வீடு

காற்றில் சலசலத்த மரக்கிளைகள்
இருகை விரித்து 
மோகினியாட்டம் ஆடுவது போல் இருந்தது.
மெல்லிய ஈனஸ்வரம்
'வாயை மூடியுமா இவன் திருந்தல'
என்று திரும்பி பார்த்தோம்
இந்த முறை நிச்சயமாக
அவனில்லை.
நிலவொளியில் மிளர்ந்த வீட்டின் முன்
வெண்புகை சூழ
கரிய நிழலொன்று உரு கொண்டு
எழுந்தது
நாவரண்டு, விழி மருண்டு
ஓட எத்தனிக்க மறுத்து
மரத்துப் போன கால்களுடன்
திக்கி நின்றிருந்த தருணத்தில்
'உங்க இன்ஸ்டா ஐடி கிடைக்குமா டோலி' என்றான்.
அவன் தான்
அவனே தான்
ஈனஸ்வர மடையன்.
'ச்சீ பேய கூட விடமாட்டியாடா'
காரி உமிழ்ந்து
'எடுத்தேன் பாரு ஓட்டம்'
என ஓடி மறைந்தது
பேதலித்த பேய்.

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1264
  • Total likes: 1097
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
அர்த்தஜாம நேரத்தில்
பயமுறுத்தும் இரவு பொழுத்தில்
ஒற்றை பாழ்டைந்த இடிந்த கட்டிடம்
என் கண்ணில் தெரிய
நான் விழித்திருக்க
சில் சில் என சத்தம் கேட்க
என் உள்ளத்தில் ஏதோ பயம் தாக்க
பெர்ளணமி நிலவு ஒளியிலும்
என் மனம் இருளாய்
மல்லிகை வாசத்துடன்
மெல்லிய கொலுசு ஒளியும்
சேர்ந்து வர
வியர்த்த உடம்போடு
பயந்த உணர்வு என்னுள் வர
கண்ணெதிரே ஒற்றை இருண்ட வீடு
பயந்த என் இதயம்
வறண்ட என் நாவிற்கு தண்ணீர் தேட
அகன்ற பாத்திரத்தில்
மிகுந்த பயத்துடன்
திறந்து பார்க்கும் போது
பூட்டிய கதவு தானாக அசைந்து ஆட
மரக்கிளையில் இலைகள்
சல சல என‌ அதிர
கண் மையிட்ட மைவிழியில்
கண்ணீர் வடிய
வழி தேடி பாதை நோக்கி
பயத்துடன் ஓடினேன்
ஒற்றை வெண் உருவம்
தலை விரிக் கோலமாய்
சற்றே என் அருகில்
தொட்டு விடும் என மனப் பயத்துடன்
அருகில் வர பதறிப் போனேன்
விகார முகத்தோடு
கோர தாண்டவம் ஆடும்
அகோரமாய்
சிரித்த உருவம்
கூரிய பற்களுடன்
நீண்ட கையுடன்
சீரிய புயலாய்
என்னை தாக்க ஓடி வர
ஓ ஓ என அலறி எழுந்தேன்
ஆ ஆஃது வெறும் கனவு
ஆனாலும்
ஓற்றை இடிந்த கட்டிடம் கண்முன்னே
அமைதியான அறையிலும்
சத்தமாய்
என் பயந்த மனத்துடன் நான்
விழித்தேன் அலறிய சத்தத்துடன்

அச்சம் அறியாமை என்ற பேயின்னை
மனத்தில் இருந்து நீக்கி
மனத் தூய்மையுடன்
நற்சிந்தனையோடு
நயம் பட வாழ்வோம்
நல் ஒழுக்கத்துடன் இவ்வையகத்தில்







 

Offline Clown King

ஓவியம் உயிராகிறது

அவளின் காலடி பட்டதும் இருண்ட இல்லறமும் நல்லறமாகும்
தீபம் இல்லறத்தில் நேர்மறை ஆற்றலை ஊக்குவிக்கும்

அவளே தீபமாக தோன்றி ஒளிப்பிழம்பாக இருண்ட இல்லறத்தை தனது வருகையால் இல்லறத்தை நல்லறமாக மாற்றுகின்றார்

இருண்டு கிடக்கும் இல்லறத்தை
பௌர்ணமி நிலவால் கூட உட்புகுதல் இயலவில்லை அவள் கால் பதம் பட்டதும் ஒளிர  தொடங்குகின்றது

எண்ணம் போல் வாழ்க்கை
நல்ல வார்த்தைகள் நல்ல எண்ணங்கள் இவை இரண்டும் நல்ல செயல்களை செய்யத் தூண்டுகின்றது நல்ல செயல்களை செய்யும் போது தான் மட்டும் ஒளிராமல் தன்னுடைய சுற்றத்தையும் ஒளிரச் செய்கின்றது

பெண்மையை ஏன் எதிர்மறை ஆற்றல் அதிகம் உள்ளதாக கருதுகிறோம் பெண்மை அன்பின் அடையாளம் பொறுமையின் சிகரம் நல்ல எண்ணங்களின் கோவில்

இப்பேற்பட்ட எண்ணங்களை கொண்ட பெண்மை இல்லறத்தை ஒளிமயமாக்கவே முடியும்
இருண்ட இல்லறமும் நல்வழிப்படும்
இல்லறம் நல்வழி பட்டால் ஸ்ரீதேவி குடியிருப்பாள் ஸ்ரீதேவி குடியிருந்தால் சுபிட்சம் உண்டாகும் சுபிக்ஷம் உண்டானால் பட்ட மரமும் துளிர்க்கத் தொடங்கும் மீண்டும் உயிர் பெறும் அவள்  கால் பதம் பட்ட அடுத்த நொடி

நல்லதே நினை நல்வினையை செய்  நல்லதே கிடைக்க பெறுவாய்

என்றும் உங்கள் Clown king 🤡

Offline Thenmozhi

  • Jr. Member
  • *
  • Posts: 84
  • Total likes: 597
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
   சொற்பனத்தில் பயந்த நான்!

அன்று பூரணை நாள் நன்றாக உணவருந்தி ,உறக்கமோ சொற்பனத்தில்!
அரண்மனை வீடு ஒன்று ஆகாயத்தை தொடும் உயரத்தில்!
அதிர்ந்து போனேன் எங்கள் ஊரில் இப்படி ஒரு வீடா என்று!
அடர்ந்து விரிந்த விருட்சங்கள் விண்ணைத் தொட்டபடி!

முழுமதி அழகு கண்களை பறித்தன!
முற்றிலும் இருள் சூழ்ந்து தென்பட்ட அரண்மனை!
முணு முணுக்கும் ஒரு பெண்ணின் குரல்!
முழங்கியது எதோ ஒரு சத்தம் பட பட என்று என் செவிகளில்!

"வா தேனு வா "என்று என்னை அழைத்தாள் பெண்ணொருத்தி!
யாரு நீங்கள் என்று நான் கேட்க ,பக்கத்து வீட்டு மல்லிகா அக்கா என்ற பதில்!
சலங்கை ஒலி என் காதுகளில் "சல சல" ஒலிக்க ,"ரா ரா மல்லிகாக்கு ரா ரா "பாட்டு பாடி நடனம் ஆடினாள்!
இசையில் மயங்கிய நான் "இதோ வந்திட்டேன் நடனமாட" கால்கள் அரண்மனை நோக்கி....

கண்டது பெண் அல்ல பயங்கரமான பேய்....👿
கண்களை காணவில்லை புகார் நடுவே பெண் உருவம்!
கால்கள் தரையை தொடாமல் உயரத்தில் பறந்தது போல தோற்றம்!
கங்குகரை இன்றி தலைமுடி காற்றினில் மிதந்தபடி!
கண்கள் கலங்கி "ஐயோ அம்மா என்னை காப்பாதுங்க" என்று அலறினேன்!

அரண்மனை உள்ளே அதிர்ச்சி ஊட்டும்  சிலைகள் மிரள வைத்தன!
"அங்கே என்ன பார்வை நான் சொல்வதை கேள்" குரல் அசரீதியாக!
" நான் FTC இல் உன்னை போல் vibe பண்ணிகிட்டு இருந்தேன்"
"எங்கிருந்தோ வந்தவன் என்னை love என்று சொல்லி ஏமாத்திட்டான்"
"பிரிவு தாங்க முடியாம நான் தற்கொலை செய்து இப்போ பேய் ஆக அலைகிறேன்"
"அவன் FTC கு வருகின்ற எல்லா பெண்கள் கூடவும் கடலை போட்டு சந்தோசமாக இருக்கிறான்"

"மல்லிகா பேய் FTC ல் யாரும் love பண்ணுவாங்களா? அது உன் தப்பு"
"ஆ ஆ எதிர்த்து பேசுவியா தேனு ,உயிரோட போக விருப்பம் இல்லையா?"
"சொல்லுங்க மல்லிகா பேய் 👿"
"நான் நடுராத்திரியில் அவனை தேடி FTC வருவேன்"
"நான் வரும்போதெல்லாம் நீ தான் FM கேட்டு   vibe பண்ணிகிட்டு இருக்கிறாய்"
,"அதனால தான் உன்னை இங்கே கூட்டி வந்தேன்"

"நான் என்ன பண்ணனும் சொல்லுங்க மல்லிகா பேய் 👿"
"இந்த பூரணை முடியும் முன் அவனை அரண்மனைக்கு கூட்டி வா"
"நான் அவன் கூட வாழ முடியலனாலும் வா மல்லிகாகு வா பாட்டுக்கு நடனம் பண்ணா போதும்"
"இது உன்னால் தான் முடியும் தேனு"
"உனக்கு நான் பிரியாணி வாங்கி தாறேன்"
"பிரியாணியா இப்பவே பண்ணுறேன் மல்லிகா பேய்"
"எப்படி அவனை கண்டு பிடிக்ககிறது"
" அவன் register I'd ல் வந்தாலும் guest I'd ல் வந்தாலும் ஒரே dialogue சொல்வான் பொண்ணுங்க்கிட்ட"
"நீ மட்டும் தான் FTC இல் என் first crush"
"ஓகே மல்லிகா பேய் விடியும் முன் உன்கிட்ட அவனை கூட்டி வாறேன்"
"சீக்கிரம் போ தேனு உன்னை FTC ல் uc க்கு உன் நண்பர்கள் தேடுறாங்க"
"மல்லிகா பேய் மல்லிகா பேய் நீங்க ரொம்ப நல்லவங்க"
"தேனு நீ போய் song vibe பண்ணு FTC இல்"
"உன்னை யாரும் ஏதும் சொன்னால் ,நான் பாத்துக்கிறேன்"

"தேனு அலாரம் அடிக்குது எழுந்துக்கோ"
"என்ன அம்மா குரல் கேட்குதே"
"அட சே நான் கண்டது கனவா?"
"கடைசி வரை அவன் யாரு என்று கண்டு பிடிக்கலையே"!
" சொற்பனத்தில் பயந்தது மட்டும் தான்"




Offline சாக்ரடீஸ்

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1902
  • Total likes: 5922
  • Karma: +0/-1
  • Gender: Male
  • 🍀Smile-Breathe-Find Peace🍀

ரசிகனின் பேய் மனப்பான்மை

இருட்டில் பதுங்கி இருக்கும்
பசியாறாத பேய் போல
மனிதன் மனதை பிடித்து
அறிவை விழுங்கும் ரசிக வெறி

அந்த வெறி
மனித மனங்களில் நுழைந்து
தூய அன்பை கிழித்து
சுய அறிவை எரித்து
தலைவிரித்து பேய் போல ஆடும்

பசிக்காக அல்ல
நடிகனை பார்க்கும் வெறியால் மட்டும்
உயிர்களை சிதைத்து
நெருக்கும் கொடூர பேய்

மூச்சை நிறுத்தும் கூட்ட நெரிசல்
கண்ணீரை குடிக்கும் தாகம்
அழுகையை கேலி செய்யும் சிரிப்பு
இவையே பேயின் விளையாட்டு

பச்சக் குழந்தைகளையும்
தன் வலையின் பிடியில் இழுத்து
மிதித்து நசுக்கி கொள்ளும்
கொடூர கரங்களே ரசிக வெறி

பெயரை கூச்சலிட தூண்டுகிறது
கத்திக் குரல் கொடுக்கச் சொல்கிறது
யாரேனும் விழுந்தால் கைநீட்ட மறுக்கிறது
பேயைப் போல் பைத்தியமாய்
ஆட்டம் போடச் செய்கிறது

ரசிக வெறி என்னும்
பேய் பிடித்துவிட்டால்
அந்த நேரத்தில் மனித உயிர் அதற்கு
பொருட்டு ஒன்றுமில்லை
மூச்சுக் கூட அங்கு மதிப்பு இல்லை
செல்லாக் காசைப் போல வீணாகிப் போகும்

நடிகரை உயர்த்துவோம் எனச் சொல்லி
தம் வாழ்க்கைப் பாதையை
இரத்தத்தால் மாசுபடுத்திக் கொள்கின்றனர்

ரசிக வெறி என்ற பேய்
வாழ்க்கையைச் சிதைத்து விடும்
தம்முடன் இருந்தவர்களையும்
மெதுவாக நாசமாக்கி விடும்
அதை அறியாத மயக்கக் கூட்டம்

இந்த தற்குறி பேய்கள் தோன்றும் பொழுது
மனம் அச்சத்தால் நிறைந்தது
கண்ணில் ஒரு பயம் காது விழியில் சத்தம்
உள்ளத்தில் இருள் பெருகிக்கொண்டே இருக்கின்றது.

இந்தப் பேயை விரட்ட
வாளும் ஆயுதமும் தேவையில்லை
மனம் விழிக்க வேண்டும்
ஒழுக்கம் பிடிக்க வேண்டும்.

பேயின் நிழல் அகன்றால்தான்
உயிரின் மதிப்பு காக்கப்படும்
அப்போதுதான் மனிதன்
சுதந்திரமாகச் சுவாசிப்பான்.

ரசிக வெறி மனப்பான்மை
சினிமா மோகம் எனும்
பேயின் பிடியிலிருந்து
தமிழ்ச் சமூகம் விடுதலை
பெறும் நாளில்தான்

முழுமையான முற்போக்குடன்
மனங்கள் விழித்தெலும்
அப்போதுதான் இச்சமூகம்
ஒளி பொங்கும் மாநிலமாக மிளிரும்.

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1828
  • Total likes: 2384
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
நான் பார்த்தது பேய் அல்ல தேவதை!

எங்கள் கிராமம் மிக அழகிய சிறிய கிராமம்!
அன்று பெளர்ணமி இரவு
அங்கு மொத்தமாய் பத்து குடும்பங்கள் மட்டுமே

விளையாட நாங்கள் செல்கையில் " 6 மணிக்கெல்லாம் வீடு திரும்பிடு" என்று
சொல்லி அனுப்பும் அம்மா !

"எங்க வேணாலும் பொய் விளையாடு
அந்த பழைய வீடு கிட்ட மட்டும் போகக்கூடாது"னு என்று
தினமும் அம்மா சொல்வதுண்டு!

ஒரு நாள் கண்ணாம் பூச்சி ஆட்டத்தில்
என் தோழர் ,தோழிகளுடன்  விளையாடி கொண்டிருந்தோம்!

விளையாட்டு ரொம்ப சுவாரசியமாக கடக்க
நேரம் போனது கூட தெரிய வில்லை

 என் தோழர் தோழிகளை கண்டு பிடிக்க செல்கையில் !
எந்த பக்கம் பார்த்தாலும் அவர்களில் ஒருவர் கூட
என் கண்ணிற்கு தெரியவில்லை
எங்கோ சென்று ஒளிந்து கொண்டனர் போலும் என எண்ணினேன்

பவுர்ணமி  நிலவு பகல் போல ஜொலிக்க
எங்கே ஒளிந்திருப்பார்கள் என  ஒவ்வொரு வீடாக
சென்று நானும் தேட

அந்த பழைய வீட்டின் அருகே
என் தோழர் தோழியரின் குரல் ஒலிப்பது போன்று உணர்ந்தேன் !

" நண்பர்களே எங்க இருக்கீங்க "என்று கூப்பிட
 அந்த வீட்டை பார்த்தால் சற்று பயம் என்னுள் உணர ,
என் நண்பர்களின் சத்தம் கேட்கிறதே என நம்பிகையில்
 "உடனே பின்னுக்கு பாருங்க உங்க எல்லாரையும் அவுட் பண்ணுறேன்" என்று சொல்லி கொண்டு ,
அந்த பழைய வீட்டை நெருங்க ..

சற்று தூரத்தில் வீட்டில் இருந்து ஒரு நிழல்
அது நம்ம தோழிகளில் யாரோ தான் என்று நினைக்க !

வீட்டில் போன என் தோழியை போன்றே
 கருப்பு நிற ஆடை உடுத்திய அழகிய தேவதை போன்று  குட்டி பெண் நின்று கொண்டு இருந்தாள்!

 அவளிடம் "நீ யாரு? ஏன் இங்க இருக்கீங்க ?"என கேட்டேன்!
" இது என்னோட வீடு இங்கு நான் வசிக்கிறேன் "என்றாள்!

" நீங்க இங்க என்ன பண்ணுறீங்க? னு அந்த குட்டி பெண் கேக்க,"
நானும் என்  தோழர், தோழியரும் கண்ணாம்பூச்சி ஆடி கொண்டு இருந்தோம் "
அவர்களை தேடி  நான் இங்கு வந்தேன் என்றேன் !

அந்த குட்டி பெண்ணோ "என்னையும் உங்க விளையாட்டில் சேர்த்து கொள்ளுங்கள்" என்றாள்!
நானோ எதுவும் புரியாமல் திகைத்த படி," சரி நீங்களும் கலந்துக்கோங்க "என்றேன்!

அவளை ஒளிந்து கொள்ள சொன்னேன்!
நான் கண்டு பிடிக்கிறேன் என
அவளும் ஒளிந்து கொண்டாள்!
நான் கண்டு பிடிப்பேன்  என்று

அன்று அவளை தேட தொடங்கிய நான் ,
இன்றும் அவளை தேடிக்கொண்டே இருக்கிறேன்!

அவள் யார் என் மனதை பறித்துச் சென்ற தேவதையா?
இல்லை உனக்கு மனதே வேணாம் என்று என் மனதை திருடி சென்ற ராட்சசியா?
என்றும் அவளின் நினைவில் நான்!

அவளை சிலர் பேய் என்றார்கள்!
அவளை அருகில் பார்த்த நான்
அவள் பேய் இல்லை ,அவள் பேய் என்ற போர்வையில்
தன்னை காப்பாற்றி கொள்ள வாழும் தேவதை என்றேன் !
 
அவளை ஒரு நாள் கண்டு பிடித்திடுவேன் என்ற
நம்பிக்கையில் கடக்கிறது
என் வாழ்வின் பயணம்
« Last Edit: September 30, 2025, 04:15:06 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline mandakasayam

  • Sr. Member
  • *
  • Posts: 388
  • Total likes: 944
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யாதும் ஊரே யாவரும் கேளீர்
    இருள் நிறைந்த இரவில் குளிர் கலந்த காற்றில் குமரி பெண்ணாய் உருவம் எடுத்து கொஞ்சும் அழகில் கொள்ளை கொள்ள காத்திருக்கிறாள் ...

    கயவர்களால்    உயிர் பிரிந்து அதற்க்கு  பரிகாரமாக பல உயிர்களை காவு வாங்க உயிர் பிரிந்த இடத்தில் பலிதீர்க்க வலிகளை சுமந்து வாயிலில் நோட்டமிடுகிறாள்.
    சொல்லாமல் சொல்லும் மொழி ஆவிக்கு
 உயிர் பசி தானே

இரவு 12 மணியில் இடி இடிக்கும் மழை வராது வீடே அதிரும் நிலநடுக்கம் இல்லாமல், கதவுகள் தட்டும் கனவில் கதைகள் வந்து போகும் கழுத்தை நெறிக்கும் காட்சியாக

மனதில் பயம் வர வியர்வை வேர்த்துகொட்ட ஆவியின் நடையில் அகிலமே அரண்டுபோகும் , யார் நீ என கேட்க
ஆவியின் திகிலூட்டும் பாடல் மூலம் பதில் சொல்வாள்

சிரிப்பு சத்தம் செவியில் வளையல் சத்தம் சுவரில் கொலுசு சத்தம் தரையில் இரத்த கரைகள் ஓவியமாகும் குரல் கேட்கும் யாரும் இல்லாமல் மனித உருவம் போல் புகை சூழ்ந்த புதிய முகம் ,

வாழ்ந்த வீட்டை தேடி வாழ நினைக்கும் ஆன்மாக்கள் கோரமுக பாவணையில் கொலை செய்யும் பேய்கள் சாந்தமில்லா மௌனங்களால் நாளடைவில் சாம்பலாய் போகுமே...

நிறைவேறா நினைவுகள் இனி பலிக்கபோகாது நான் இருக்கும் இடத்தில் நீ வர சில காலமே....பௌர்ணமி நிலவில் அவளும் அழகுதான் அவளுக்கானது அந்த வீடு மீண்டும் வருவாள் அதே நேரம் அதே இடம்




 
« Last Edit: September 29, 2025, 11:14:11 PM by mandakasayam »

Offline Yazhini

  • Sr. Member
  • *
  • Posts: 311
  • Total likes: 1232
  • Karma: +0/-0
  • 🔥தீதும் நன்றும் பிறர்தர வாரா 🔥
    • Google
சிரிப்பொலி நிறைந்திருந்த வீடு...
இன்றோ அது தனிமையின் கூடாரம்...
நினைவுகள் என்னும் அழகிய அரக்கனிடம்
சிக்கிக்கொண்டது ஒவ்வொரு இரவும்...

நெஞ்சில் ஈரமற்ற அந்த அரக்கன்
பகலில் தன் மாயவலையினாலும்
இரவில் தன் வன்ம சுவாலைகளாலும்
உயிருடன் வதைக்கிறான்...

இறையிடம் இறைஞ்சி விடுதலை
பெற எத்தனித்தால் இன்னும்
தன் கொடூர பிடிக்குள் இறுக்கிவிடுகிறான்...
'தனிமையே உன் விடுதலை'
என நம்ப வைத்து
மீண்டும் மீண்டும் பிடியை இறுக்குகிறான்.

நிஜ உலகில் கலந்துவிட்டால்
விலகிவிடுவான் இவ்வரக்கன் என
நினைக்கையில் போலி முகங்களும் பொய்யான உறவுகளும்
மீண்டும் இவனிடமே துரத்த - ஏளனத்துடன்
பிடித்துக் கொள்கிறான் இன்னும் அதிகமாக...

போராடி போராடி கலைத்து போவதை
ரசித்து ரசித்து வேடிக்கை பார்க்கிறான்...
ஜன்னல் கம்பி வழி ஊடுருவும்
நிலவொளியில் கலந்து, தேய்பிறை அற்றவனாய்
பார்க்குமிடமெங்கும் தன் நிழலினை படரவிடுகிறான்.

மனம் கனத்தாலும் விழிகளில் ஈரம் படர்ந்தாலும்
நீங்காமல் நிழலாய் இருப்பவனும் இவனே...
ஓர் உடலில் ஈருயிரைத்
தாங்க செய்பவனும் இவனே...

நினைவரக்கன்...
கண்களின் ஒவ்வொரு துளியிலும் உருவாகி
இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் உயிர்பெற்று
எழுத்துகளில் நிலைத்து வாழ்கிறான் 💔💔💔

Offline TiNu




அவள் எதை பார்க்கிறாள்..
அவள் எதை தேடுகிறாள்...
அவள் எதற்கு ஏங்குகிறாள்..
அவள் ஏன் தயங்குகிறாள்..

காரிருள் சூழ்ந்த நடு இரவில்..
நிலா மட்டும் சில்லென சிரிக்க..
அந்த நிலவின் பால் ஒளியில்..
மங்களாக நிழலாடும்  அவ்வீடு..

இந்த வீடு... நாம் வாழ ஏற்றதா?
இங்கு மகிழ்ச்சி இருக்கின்றதா?
இங்கு நிம்மதி கிடைக்குமா?-இனம்
புரியா அச்சத்தோடு ஆராய்க்கிறாள்..

வீட்டில் அமானுஷீய அதிர்வுகள்..
நம்மை வெகுவாக ஆட்கொள்கிறதே..
அறைகள் முழுவதும் இருள் சூழ்ந்து. . 
நம்மை சீராக சுவாசிக்க விடவில்லையே.

மனையிலிருந்து வெளிவரும்
வெண் நிற புகையும் நம்மை
மிரட்டும் பூதமென உருக்கொண்டு
பேயாட்டம் ஆடி பயமுறுத்துகிறதே.. 

டேய்,
பாதகனே.. எங்கேயடா மறைந்திருக்கிறாய்..
ஒழுங்காக என் கண் எதிரில் வந்துவிடு....
எனக்காக.. உன் மனதில் கட்டியெழுப்பிய ..
பிரம்மாண்ட கோட்டையா இது...

டேய்..
பைத்திய காரனே..  எங்கே ஒளிந்திருக்கிறாய்..
தான் கட்டிய கோட்டை வாயிலில் 
காத்திருப்பேன்.. உனக்காக...- நீயும்
விரைந்து வா..என சொன்ன மடையனே ....

டேய்..
பேயனே.. உன் மனதுக்குள் ஊடுருவி..- உன்
எண்ணங்களை நன்கு அறிந்துகொண்டேன்..
வாழவே தகுதியற்ற.. மனையை கட்டிக்கொண்டு
அவ்வீட்டில் வாழ என்னை அழைகின்றாயா?

புறாக்கள் கூடுகட்டி குடும்பமாக கும்மாளமிட
ஆந்தைகள்.. ஆனந்தமாக கூவி கூத்தடிக்க
விஷஜந்துக்கள் சந்தோஷத்தில் களித்திருக்கும் 
இவ்வீட்டில.. நீ வாழ பெண் தேடுகிறாயா?

இம்மனை வேண்டாம் விட்டுவிடு..
இந்த வீடு.. வேண்டவே வேண்டாம்..
நம் வாழ்வு சிறக்கும் மனையானது
யாதென உனக்கு உரைக்கிறேன் கேள்

உன் மனதில்..
அன்பெனும் சுவர் எழுப்பி,.பாசமெனும்
விளக்குகள்... அறைகள் எங்கும் ஜொலிக்க..
கடமையெனும்.. கதவுகள் பொருத்தி...
பொறுமை என்னும் வாசல்படிகளில்..

கனிவு என்னும் பூக்களை கைகளில் ஏந்தி..
விசாலப்பார்வையுடன் முற்றத்தில்..நீயும் .
முகத்தில் புன்சிரிப்போடு  காத்திருக்கையில்..
மானிட பிறவியான.. நான் மட்டும் அல்ல..

ஸ்வர்கத்தில் வாசம் செய்யும்.. அணைத்து..
தேவதைகளும்.. உன்வீட்டில் வாசம்செய்வாள்..