Author Topic: “உணவு பழக்கம்" பழமொழி வடிவில்…  (Read 84 times)

Offline MysteRy


*காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.

*போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

*பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலத்தில் மாங்கா.

* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல தன் காயம் காக்க வெங்காயம் போதும்

*வாழை வாழ வைக்கும்.

*அவசர சோறு ஆபத்து.

*ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்.

*இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.

*ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை.

*இருமலை போக்கும் வெந்தயக் கீரை.

*உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.

*உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி.

*கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்.

*குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை.

*கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை.

*சித்தம் தெளிய வில்வம்.

*சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி.

*சூட்டை தணிக்க கருணை கிழங்கு.

*ஜீரண சக்திக்கு சுண்டக்காய்.

*தலை வலி நீங்க முள்ளங்கி சாறு.

*தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை.

*பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி.

*மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு.

*வாந்திக்கு மருந்து மணத்தக்காளி.

*வாத நோய் தடுக்க அரைக் கீரை.

*வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்.

* பருமன் குறைய முட்டைக்கோஸ்.

*பித்தம் தணிக்க நெல்லிக்காய்.

” உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.