Author Topic: பேரிச்சம்பழம் மருத்துவம்...  (Read 38 times)

Offline MysteRy

சிறியவர் முதல் பெரியவர் வரை அன்றாடம் உணவு உண்டபின் ஒரு வேளையாவது 2 அல்லது 3 பேரிச்சம்பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். உடலின் மேலுள்ள தோல் வழவழப்பாகும். கண் சம்பந்தமான கோளாறுகள் வராது. இருந்தாலும் குணமாகும். எந்த வகையான தொற்று நோயும் அணுகாது. சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாகும். தாது விருத்தியும், போக சக்தி குறையுடையவர்கள் பேரிச்சம்பழத்தைத் தேனில் ஊறவைத்து நாள்தோறும் சில துண்டுகளைச் சாப்பிட்டு பால் அருந்தினால் நல்ல குணம் தெரியும். இருமல், கபம் போன்ற கோளாறுகளுக்குப் பேரிச்சம்பழத்தைப் பாலில் வேகவைத்து உண்டால் நல்ல பலனுண்டு.