வாழ்வில் சிலருக்கு
புன்னகை என்பது
இலையின் முனையில்
பனித்துளிமின்னுவது போல
சூரிய கதிர்கள் வரும் நேரம்
மாயமாகி விடும்
பெருந்துக்கங்கள் உள்ள உள்ளத்தில்.
புன்னகை என்பது
நாடகமாய்
இதழ்களில்
தங்கிவிடும்
நினைவில் இருக்கிறதா,
நாம் ஒருகாலையில்
நிறைய வாதமிட்டு பேசிக்கொண்டோம்
ஆனால்..
இன்று ஒரு வார்த்தை கூட
பேச முடியாத அளவுக்கு
நம்மிடம் தூரம்
இந்த உலகத்தில்
மிக அபாயகரமானது
எது என்றால் அது,
ஒருவரை பற்றிய நம் கொண்டாடல்…
மேலும் நம்மை
மிகவும் விரும்பும் அந்த நபர்
நம்மிடம் காட்டும் மௌனம்
எழுதிய முடியாத
ஒரு வலியாக
மனதில்
ஓர் ஓரத்தில்
தங்கி விடும் பாரம்
மனிதன் மனம் மாற
நொடிகள் மட்டும் போதும்,
என்று பல மனிதர்கள்
நிரூபித்துள்ளனர்.
நம் வாழ்வில்
இழந்தது அனைத்தும்
அவளுக்காகவே மட்டுமே இருந்தது
இன்று இழப்பதற்கு எதுவுமில்லை
மலர்ந்த பூ ஒர் நாள் வாடிவிடும்
அது விட்டு சென்ற வாசனை
நம் நினைவில் என்றும் இருக்கும்
நினைவுகளையேனும்
என்னிடம் விட்டுச்சென்ற
அவளுக்கு நன்றி
****JOKER****