இறுதி வரை
வாழ்க்கை
இப்படியே இருக்க வேண்டும்
என்ற கவலை சிலருக்கு
இறுதி வரை
வாழ்க்கை
இப்படியே இருந்து விடுமோ
என்ற கவலை சிலருக்கு
கவலை இல்லாத
மனிதன் இல்லை
எனவே
எது உனக்கு வேண்டும் என்று
முடிவு செய்யாதே
எது உனக்கு வேண்டாம் என்று
முடிவு செய்
அது தான் நிம்மதியான
வாழ்க்கையை தரும்