Author Topic: வேரை மறந்த விழுதே...  (Read 833 times)

Offline Anu

வேரை மறந்த விழுதே...
« on: April 11, 2012, 02:48:40 PM »




உன்னில் என்றும் தன்னைக் கண்டனள்
தன்னில் அதிகம் உன்னை உயர்த்தினள்
கண்ணே மணியே பொன்னே என்று
விண்வரை உன்னை வைத்தே போற்றினள்.


ஊட்டிய பாலுக்கு விலை வைத்ததில்லை
கொட்டிய பாசத்தை கணக்கிட்டதில்லை
நீட்டிய போதுன் விரல் வாசலை நோக்கி
தீட்டிய கத்தியில் குத்தவள் உணர்ந்தனள்.


தனியாய் பயணம் கிளம்பிய போதும்
தவியாய் அவள்மனம் தவித்திட்ட போதும்
விதியாய் எண்ணி நொந்தனள் தவிர
சதியாய் கண்டுனை சபித்திட நினைத்திலள்.


தேவைகள் முடிகையில் உறவுகள் முறியுமோ?
பார்வைகள் மாறியே பாசமும் விலகுமோ?
சேவைகள் செய்ததன் நினைவுகள் மறக்குமோ?
நேர்மையும் நியாயமும் நெஞ்சினில் இறக்குமோ?


தலையில் ஊற்றிய நீரது விரைவில்
காலை நனைக்கும் நினைவில் கொள்வாய்!
நாளை முதுமை உனக்கும் வருகையில்
பிள்ளை உன்வழி நடக்கையில் உணர்வாய்!


Offline Jawa

Re: வேரை மறந்த விழுதே...
« Reply #1 on: April 11, 2012, 04:36:46 PM »
தேவைகள் முடிகையில் உறவுகள் முறியுமோ?
பார்வைகள் மாறியே பாசமும் விலகுமோ?
சேவைகள் செய்ததன் நினைவுகள் மறக்குமோ?
நேர்மையும் நியாயமும் நெஞ்சினில் இறக்குமோ?


Nice lines :) :) :)..... unamayile ipoluthu elam petra ammavai kooda silar thaniyaga thavika vittu selgindranar ithu migavum kodumaiyana vilai........
ஊட்டிய பாலுக்கு விலை வைத்ததில்லை
கொட்டிய பாசத்தை கணக்கிட்டதில்லை
indha nandriyai naam endrum maraka koodathu :'( :'( :'( :'(

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: வேரை மறந்த விழுதே...
« Reply #2 on: April 12, 2012, 01:03:53 AM »
anu nice lines

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline gab

Re: வேரை மறந்த விழுதே...
« Reply #3 on: April 12, 2012, 12:26:55 PM »
என்றும் அன்னையின் பாசத்தை மதிக்க மறக்க கூடாது. எந்த சூழல் வந்தாலும் அன்னையை முதுமை பருவத்தில் நாம் கனிவான சொற்களாலும் ,இனிய நடத்தையாலும் மனம் மகிழும்படி வைத்துகொள்ள வேண்டும். நல்ல கவிதை அணு.

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: வேரை மறந்த விழுதே...
« Reply #4 on: April 13, 2012, 08:46:52 PM »
cuty no words to say... :'( :'( :'(


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்