Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 359  (Read 3449 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 359

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline VenMaThI

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 417
  • Total likes: 1938
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


அப்பா
என் வாழ்வின் ஒரு சொல் மந்திரம்
இருந்தவரை விளங்காத பலவும் - வாழ்வில்
தெகிட்ட தெகிட்ட விளங்கியது
அணைத்துக்கொள்ள நீரின்றி அனாதையாய் நின்ற காலங்களில்.....


அன்பாய் அணைத்தவரும் நீரே
ஆசானாய் வழி நடத்தியவரும் நீரே
கற்று தந்த வாழ்வியலுக்கு கணக்கில்லை
நீர் காட்டிய பாசத்துக்கு எதுவுமே ஈடில்லை ...


இன்றும் நான் பயணிக்கும்
அன்பெனும் பாதையை காட்டி
கண்மூடி தனமாக கடக்க
கற்று கொடுத்தவர் நீரே ....

அன்பை
அளவின்றி கொடுத்து பார் - இவுலகில்
அனைத்தும் கிடைக்க பெருவாய் என்றீர்
அளவுக்கு மீறி அன்பை வழங்குகிறேன்
உம்மை மட்டும் பெற முடியவில்லையே ?

நீர் செய்த புண்ணியங்களோ
என் கண்ணீரை துடைக்கும் கைக்கூட்டையாய்
பல நிகழ்வுகளில் உணர்ந்தும் விட்டேன் - வாழ்வில்
நீரின்றி துவண்டும் விட்டேன்...

நான் செய்த பாவமோ
இல்லை யார் விட்ட சாபமோ
இன்று வரை விளங்காமல்
இருளில் நின்று வாடுகிறேன்

தொலைத்த இடமும் தெரியவில்லை
தேடும் பாங்கும் நான் அறியவில்லை
இறைவனை நம்பி இருளில்
கண்மூடித்தனமாக கைகளை நீட்டுகிறேன்

இருட்டை நீக்கும் ஒளியாய்
இளைப்பாற மடி கொடுக்கும் தெய்வமாய்
ஒருநாளேனும் வருவீர் என்ற நம்பிக்கையுடன்
காத்திருக்கிறேன் தினந்தினம் கண்ணீருடன் ......


« Last Edit: November 18, 2024, 11:38:31 PM by VenMaThI »

Offline Minaaz

  • Jr. Member
  • *
  • Posts: 55
  • Total likes: 353
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
பிறந்தது முதல் தன் மகளின் ஒவ்வொரு வளர்ச்சியையும் கண்டு தனக்குள்ளே பெருமிதம் கொள்ளும் சுயநலம் இல்லாத ஓர் உறவு,,.

தந்தையின் கண்களில் கனவு வாழ்கிறது,
மகளின் சிரிப்பில் உலகம் ஒளிவிடுகிறது.
முள்ளுள்ள பாதையிலும் அவர் கையால் கைபிடித்து,
மலர்களை மட்டும் காட்ட நினைக்கும் உன்னத உறவு ..,

மகளின் முதுகில் சிறகுகள் வளர்க்க,
தன் சிறகுகளை தந்து தன் மகளின் உயரம் காண உந்திவிடும் உந்துசக்தி..,

பல காயங்கள், சோர்வுகள் தன்னை அண்டிய போதும் அவற்றையெல்லாம் கடந்து தன் மகளின் ஒற்றை புன்னகையில் தன் சோகம் தணிக்கும் மாயாஜாலம் தெரிந்த வித்தைக்காரர்

மகளின் வெற்றிகள் அவரின் வெற்றி மாலைகள் என,
அவளின் சோகங்கள் அவரது காயங்களாக,
தந்தையின் நிழல் எப்போதும் மகளின் அரணாக,
அவளின் புன்னகை அவரின் விலை மதிப்பில்லா வெற்றியாக,
எண்ணி தன்னுள்ளே பரவசம் அடையும் விந்தை மனம் கொண்டவர்...

எந்த நேரத்திலும், தன் மகளை தீண்டும் எந்த துயரும் தன்னை தாண்டியே தீண்ட வேண்டும் என்ற ஆணவம் பிடித்த அற்புத பிடிவாதக்காரர்..

மகளின் காலடி ஒலியே, ஒரு இன்னிசையாக
தந்தையின் வாழ்க்கை முழுதும் சிறந்து சிறப்பிக்கிறது..,

தந்தையின் நிதர்சன செல்வமாய் தன் தந்தைக்கென அவள் இதழ்களில் இருந்து பிரியும் ஒரு முத்தம் மிளிர்கிறது..🍁♥️
« Last Edit: November 18, 2024, 11:55:09 PM by Minaaz »

Offline Lakshya

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1041
  • Total likes: 1831
  • Karma: +0/-0
  • Dream it. Wish it. Do it ✨🦋
கவலைகள் பல இருந்தாலும் தன் மகளின் சிரிப்பை கண்டு ரசிப்பவரே தந்தை...
பெண் பிள்ளைகள் அதிக பாதுகாப்பாக இருக்கும் இடம் தந்தையின் கைகளை பிடிக்கும்போது மட்டுமே...

கஷ்டமே இல்லாமல் தன் மகள் வாழவேண்டும் என்று என்னும்  இதயம் தந்தை மட்டுமே...நடைபழகுவதற்காக விழுந்த தன் மகள் வாழ்வில் வேறு எதற்காகவும் விழுந்து விடக்கூடாது என்று நினைத்து தன் மூச்சு இருக்கும் வரை அவளை இதயத்தில் கொண்டு தாங்குகிறார் தந்தை...

கடவுளை நேரில் பார்க்க முடியாது , இருந்தாலும் அவரின் உருவில் என் தந்தையை பார்க்கிறேன்...அம்மாவிடம் அதிகம் சண்டைபோடும் தந்தை என்னிடம் கோவத்தை காட்டியதிலையே ஏன்??

ஆயிரம் தவறுகள் செய்தாலும் மகளை காக்க வேண்டும் என்று நினைத்து கொண்டு வாழும் ஜீவனே தந்தை...

பெண் பிறப்பு முதல் இறப்பு வரை எந்த பாகுபாடு இல்லாமல் நேசிக்கும் ஆண் தந்தை...எனக்கு நடைபழக சொல்லிக்குடுத்த தந்தையை காலம் முழுவதும் காத்து அரவனைபதிலும் சுகமே அதிகம்!!!

எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் நான் நினைப்பதை பகிர ஆசைப்படுவது உங்களிடம் மட்டுமே...!!!

ஒரு பெண்ணின் முதல் ஹீரோ என்றும் அப்பா தான்...மகள்களை வளர்க்க எந்த சம்பளமும் வாங்குவதில்லை தந்தை...என்னை நானே நம்பாத போதும் என்னை நம்பியது என் அப்பா மட்டுமே!!

பேசுகிறேன், பேசுகிறேன் பேசிக்கொண்டே இருக்கிறேன்...
வருடங்கள் போனாலும் , பேச ஆயிரம் கதைகள் இருந்தாலும் உங்களிடம் சிரித்து கொண்டே இருக்கும் அந்த நிமிடங்களை விட்டு விட கூடாதென்று.....

                                                                                                 -❤️லவ் யூ அப்பா❤️
« Last Edit: November 19, 2024, 10:42:33 PM by Lakshya »

Offline RajKumar

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1212
  • Total likes: 1019
  • Karma: +0/-0
  • Gender: Male
  • hi i am Just New to this forum
பெண் மகள் பூமியில் பிறந்த நாளன்று
ஆண்மகன் ஆகுகிறான் தந்தையாய் தன் தாயே தனக்கு மகளாய் பிறந்து
இருப்பதாக‌‌ எண்ணி மகிழ்கிறான்
முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் தன் மனைவியின் சாயலில் பார்த்து அளவில்லா ஆனந்தம் அடைக்கிறான்

அப்பாவின் பாசம் ஆழ்கடல் போன்றது வெளியே தெரியாது ஆழம் அதிகம்
வெளியில் யாரும் அறியாமல் தன் மனதில் பாசத்தை மறைத்து வைத்திருக்கும் உறவு

அப்பாவின் சில நேர கண்டிப்பு
பலா பழத்தின் மேல் தோல் போல்
கடினமாக இருந்தாலும் 
அவரது அரவணைக்கும் அன்பு
உள்ளே உள்ள தித்திக்கும்
பலா பழத்தை போன்று இனிப்பு ஆக இருக்கும்

அக்கா தங்கை தாரம் என வரிசையாக அன்பு காட்டும் ஆண்மகன் தன் அன்பை ஏனோ தன் மகளுக்கு முதலிடம் கொடுக்கிறான்

ஓடி ஓடி உழைத்து ஓயாத அவன் உழைப்பு சோர்வு மகளின் முகத்தை பார்க்கும் நேரம் கொஞ்சி பேசும் மகளின் வார்த்தை கேட்டுக்கும் போது உழைப்பு சோர்வை விரட்டி அடிப்பதும் ஒரு வியப்பே

முதல் தோழன் மகளுக்கு தந்தையென்றால்
தந்தைக்கோ முதலும் முடிவுமாய் மகள் ஆகுகிறாள்
மகனின் பாசம் மணம் ஆகும் வரைதான்
மகளின்  பாசமோ வாழ் நாள் முழுவதும்

தந்தையிடம் இதை‌ கேட்கலாமா என்று ஏக்கம் கொண்டு மனதில் நினைத்து இருக்கும் மகளுக்கு அவளை கேட்காமலலே மகள் மன ஆசையை நிறைவேற்றும் அற்புத‌ உறவு

தன் மகளுக்கு மணமுடித்து மழலை‌ பிறந்தாலும் மகளை குழந்தையாகவே பார்க்கிறான்

மகளின் புன்னகையில் மயங்காத தந்தையுமில்லை
தந்தையின் கடின உழைப்பை மறவ மகளும் இல்லை

அப்பாக்கள் எப்போதும் மகளின் பாசத்துக்கு அடிமை
மகள்கள் என்றென்றும் தந்தையின் பாசத்திற்கு பேரடிமை



 
« Last Edit: November 21, 2024, 10:36:12 PM by RajKumar »

Offline Thooriga

  • Sr. Member
  • *
  • Posts: 305
  • Total likes: 638
  • Karma: +0/-0
  • Gender: Female
  • இசையின் காதலி
அப்பா...

நான் பிறந்ததை ரசிப்பீங்கன்னு நெனச்ச எனக்கு நீங்க  கொடுத்ததோ ஏமாற்றம்….  காரணம் நான்  பெண்  பிள்ளைனு மட்டும் தானே…

ஒரு வேலை நான் ஆண் பிள்ளையாகா இருந்து இருந்தா என்னை தூக்கி உச்சி முகர்ந்து இருப்பீங்களா?

அப்பா..

என் பிஞ்சு கைகளை பிடித்து இருந்தால் ஒரு வேலை மனம் மாறி இருப்பீங்களா?

இல்ல இல்ல கண்டிப்பா மாட்டீங்க .. ஏன்னா உங்களுக்கு தான் என்ன  திரும்பி பாக்க கூட தோணலையே.. நா பொண்ணுன்னு கேள்வி பட்டதும் தான் நீங்க போய்ட்டிங்களே..

நா அம்மா வயத்துல இருக்கும் போது உங்க குரலை கேட்டு இருக்கேன்.. ராஜா.. வைரம்.. தங்கம்..என் வாரிசுன்னு சொன்னீங்களே அப்போ அது நா இல்லையா பா ?

உங்க அரவணைப்பு, உங்க முத்தம் எல்லாம் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா அது எல்லாம் இனிமே எனக்கு இல்லையா பா..?

உங்க பாசம் எல்லாம் நா யாருனு தெரியுற வரைக்கும் தானா?

நான்தான் இருக்கேன்னு உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா   உங்களுக்கு நல்லா இருந்து இருக்கும்ல பா?

யாரு என்ன  வேனா  சொல்லட்டும்   நீங்க  என்ன  வெறுக்கிறது நியாயமா..?

உங்க உதிரத்துல இருந்து வந்த என்னை வெறுக்க உங்களுக்கு  எப்படி மனம் வந்தது பா....

அடுத்த ஜென்மத்திலும் உங்கள் மகளாக தான் பிறக்க விரும்புகிறேன்.. அப்பவாச்சு என்ன எதுக்குவீங்கன்னு நம்புறேன் அப்பா

தந்தையின் சஸ்பரிசத்திற்கு ஏங்கும் பெண் பிள்ளைகளுக்கு சமர்ப்பணம்

அப்பா.. 
அப்படிங்குற ஒரு சொல் ஒரு பொண்ணுக்கு பொக்கிஷமான உறவு.. எனக்கு என் அப்பா எப்பவும் பொக்கிஷம் தான் என் மேல அவளோ பாசம் வெச்சு இருக்கும் ஒரு ஜீவன்...

பாசம் காமிக்குற அப்பாக்கள் மத்தியில இப்படியும் சில பேரு இருப்பாங்களா அவங்களுக்கான பதிவு..

என்றும் அன்புடன்
தூரிகா


« Last Edit: November 20, 2024, 05:03:09 PM by Thooriga »

Offline SweeTie

உதிரத்தை  கொடுத்த அப்பன்  எனக்கு
உறவை கொடுக்கலையே
பாவத்தின்  சின்னம்  என்றெண்ணி  என்னை
பார்க்காமலே  போனாரோ 

முத்தமிட  முடியலையே  உன்னை
எட்டி நின்று பார்க்கவும்  கூடலையே
ஊர்  பேரும்  தெரியலையே    உறவு சொல்லி
கூப்பிடவும்  தெரியலையே   

பள்ளி செல்லும்  காலத்தில்   பலரும் என்னை
பாவமாய்   பார்க்கிறார்கள் 
தீண்ட தகாதவள்  போல்  தள்ளிநின்று 
எள்ளி ஏளனமாய் சிரிக்கிறார்கள்

தந்தையுடன் கைகோர்த்து பள்ளிவரும்
பாலகர்கள்  மத்தியிலே 
தனி மரமாய்  நிகிறேனே, என்  மனசு 
பதறுவதும்  தெரியலையே உனக்கு   

முதல் எழுத்தும்  தெரியவில்லை
முடிவும் தெரியவில்லை
வாழ்க்கை  துரத்துமட்டும்   என்
வாழ்க்கையும்  ஓடிடுமே 

நான் செய்த  பாவமா  இல்லை
என் முற்பிறப்பின் சாபமா  தெரியலையே 
நான் கேட்டு  பிறக்கலையே !   இறைவா
எனக்கெதற்கு  இப்பிறப்பு ?

 

Offline Ishaa

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1327
  • Total likes: 2802
  • Karma: +0/-2
  • Gender: Female
  • Faber est suae quisque fortunae
மூன்றாவது வருடம்
நீ இல்லாமல்
உன் பிறந்தநாளை
நினைத்து வருகிறோம்

நீ ஒருபோதும் என்கிட்ட
பெரிய பரிசு கேட்டது இல்லை
நானும் உனக்கு ஒரே ஒரு
முத்தம் இது ஏமாத்திடுவேன்

உன் பிறந்தநாளுக்கு எப்பவும்
ஒன்று சேரும் குடும்பம்
இப்போ ஒன்றாய் நின்றாலும்
தனியாக நிற்குறோம்
நீ இல்லாமல்

எங்க அடையாளம் நீ
எங்க முகவரி நீ
நீ எங்கோ சென்றாய்
நாம் அனாதை ஆனோம்

உன்னை நினைத்தால் மனம்
மீழ்ந்து வருது இல்லை
உன்னை நினைக்காமல் இருந்தால்
உன்னை மறந்துருவேன் என்று
பயமா இருக்கு அப்பா

தைரியமோ , அறிவுரையோ
நீ என்னிடம் திட்டி தான் சொல்வாய்
நீ திட்டுறது மறுபடியும் கேக்கோணும் போலே இருக்கு
அப்பயாச்சும் எனக்கு
மனத்தெளிவும் ,
மனதைரியமும் வருதா என்று பார்க்க .

Wo bist du? - எங்கே நிற்கிறாய்?
என்ற msg கூட
நீ போன பின்
யாரிடமும் இருந்து வருது இல்லே .
என்னை தேடிய ஒரு உயிர் நீ .
இப்போ நான் தொலைந்து போய் நிற்கிறேன் .
என்னை தேட வருவாயா , அப்பா ?

என் வாழ்க்கையை வாழ எல்லாமே சொல்லி தந்தாய்
ஆனால் நீ இல்லாமல் வாழ்வது எப்படி என்று சொல்லி தராமல் சென்றாய் .

என் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன்
நான் அழுதா உனக்கு பிடிக்காது
இருந்தும்
சில சமையம் கண்ணீருடன்
சில சமையம் புன்னகையுடன்
வாழ்கிறேன் என் வாழ்க்கையை அம்மாவுடனே 

எவ்ளோ வருடம் நீ என் அருகில் இல்லாம இருந்தாலும்
ஒரு போதும் மாறாத ஒரு விஷயம்

என் ராஜா நீ
என் தங்கம் நீ
என் தோழன் நீ

உன்னை போல் ஒருவனை நான் மீண்டும் இந்த ஜென்மத்தில் சந்திப்பேனா தெரியல அப்பா

அதனால் அடுத்த ஜென்மத்திலும்
மீண்டும் உன் மகளாய் பிறக்க
வரம் கேட்கிறேன் அப்பா.

Miss u தங்கம் .......
#04.11.2024

Offline Vethanisha

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1440
  • Total likes: 3018
  • Karma: +0/-0
  • Silence says so much♥️ Just listen

அன்பு மகளே

என் மனதின்  ரத்தினமே
என் கண்ணில் விழுந்த மணியே
என் கையில் பூத்த மலரே
என் வாழ்வின் முழு  பூரணமே ♥️

நீ பிறந்த தருணம்
கையில் உனை  ஏந்தும்
பாக்கியம் இல்லை  எனக்கு
கடல் தாண்டி திரவியம் தேடும்
தகப்பனுக்கு  வந்த நிலையாய்
இறைவன் போட்ட (விதி) கணக்கு

சின்ன சின்ன கால் பதித்து
நீ நடந்து வரும் அழகை - (வெறும்)
 காணொளியாய்  கண்டு
நெஞ்சமும் இங்கே  சிலிர்த்ததம்மா

பற்கள் இல்லா உன்  புன்னகை 
வெண்பவளமாய் மின்னுவதை
 காணும் போதெல்லாம் சிரிக்கிறேன்
  உன் நிழல் படத்தில் கண்டு தானம்மா

அப்பா என்று அழகாய் 
 நீ அழைக்கும் குரலே
எனை எழுப்பும்  அலைபேசி மணியம்மா
'எப்போ வரீங்க' 
என  நீ கேட்கும் தருணம்
உயிரே ரணமாய் கொல்லுதம்மா

நீ கேட்டதை குடுக்க 
உனக்கான கனவு மெய்ப்பட
தூரம் என்ற துயரம்
நானும் கொஞ்சம் பொறுக்க 
நேரில் காணும் தருணம்
நீ தந்த நெற்றி முத்தம்
கஷ்டமும் காற்றாய் கரைந்து
வாழ்வே அமுதாய் மாறுத்தம்மா ❤️

« Last Edit: November 22, 2024, 11:39:03 AM by Vethanisha »