எனக்கென்று என் இறைவன் தீர்மானித்த மரணம் நிச்சயம் என்னை வந்தடைந்தே தீரும்.
உறவுகளே என் இறப்பு செய்தி உங்களை வந்து அடைந்தால்,
எனக்காக படைத்த இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுங்கள்.
என் தவறுகளை மன்னித்து, நான் செய்த நன்மையை பற்றி மட்டுமே பேசுங்கள்.
அன்னாளில் என்னால் உங்களை காண இயலாது, நீங்கள் என்னை காண்பீர்கள்.
நீங்கள் என்னிடம் பேச நினைத்தாலும், என்னால் செவி சாய்த்து கேட்க இயலாது.
நான் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும், என் வார்த்தைகளும், நினைவுகளும் நிச்சயம் உங்களோடு இருக்கும் என நம்புகிறேன்.
என்னை படைத்த இறைவன் என்னை பொருந்தி கொள்ளட்டும்... ☝️
உறவுகளே! நம் மரணம் மிக சமீபத்தில் இருக்கிறது. அது நம்மை வந்தடையும் முன், நலவை தேடிக்கொள்ளுங்கள்....
MN-AHAMED AARON....