Author Topic: அன்பு !  (Read 881 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1217
  • Total likes: 4124
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
அன்பு !
« on: June 08, 2024, 06:08:39 PM »
இருவித
மனிதர்கள் சூழ் உலகு
இது

வாழ்க்கையின்
திரைக்கதையை
சொந்தமாய் எழுதி
வாழும்  சிலர்

யாரோ
எழுதும் திரைக்கதையில்
கதா பாத்திரங்களாய்
வாழும் சிலர்

சில நேரம்
வாழ்க்கை
வானொலி போன்றது
நாம் எதிர்பார்க்கும்
பாடல் அதில் கேட்பதில்லை
கேட்கும் பாடல்
பிடித்தமாய் இருக்க
பிரயத்தனிக்கிறோம்

எத்தனை முறை
பார்த்தீர்கள் என்பதல்ல,
எத்தனை முறை
பேசினீர்கள் என்பதல்ல.

ஒரு தோற்றம்,
ஒரு புன்னகை என்பது
உங்களைத் தொடர்ந்து
நகர்த்துகிறதா?
அதுதான் விஷயம்

பூமி முழுவதையும்
அசைக்க ஒரே ஒரு மின்னல் போதும்.
அதில் எத்தனை காளான்கள்,
பூக்கள் மற்றும் நீரூற்றுகள் பூக்கின்றன

அது தான் ஒருவரிடம்
நீங்கள் உணரும்
முதல் மோகம்

ஒரு நதி போல
முடிவில்லாமல் ஓடட்டும்..
ஆழமான மற்றும்
நேர்மையான அன்பின் கடலை
உருவாக்கட்டும்

காதல், மகிழ்ச்சி, சண்டைகள்,
இணக்கங்கள், புகார்கள், ஏமாற்றங்கள்,
நூற்றுக்கணக்கான முத்தங்கள் என்று
ஆயிரக்கணக்கான அலைகளால்
அந்தக் கடல் நிரம்பட்டும்.

மனிதர்களின்
இதயங்களில்
இடம் பிடிக்க
எங்கே நீ சென்றாலும்
அன்பை பரப்பு
அதுவே போதுமானது


***JOKER*** 

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "