Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 341  (Read 2453 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 341

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Sun FloweR

இரவென்ன ? பகலென்ன?
நேரம் காலம் பார்ப்பதில்லை..
அண்ணன் என்ன? தம்பி என்ன?
உறவும் இங்கு இருந்ததில்லை..

ஆணென்ன? பெண்ணென்ன ?
பால்கள் இயல்பு திரிந்ததென்ன..
மானமென்ன? வெட்கமென்ன?
காற்றிலே இயல்பு கரைந்ததென்ன..

மதுவின் பிடியில்
மயங்கி கிடப்பதும்,
மாதுவின் மடியில்
முயங்கி திளைப்பதும்,
வருங்கால தூண்களின்
வாழ்தல் ஆயிற்று..

நடனம் என்ற பெயரில்
அர்த்தமற்று ஆடுதலும்,
ஆடை என்ற பெயரில்
அவயங்கள் தெரிவதும்,
நட்பு என்ற பெயரில்
இச்சித்து நகர்தலும்,
இன்றைய இளைஞர்களின்
கேளிக்கை ஆயிற்று..

உச்சம் தரும் போதைக்காக
ஒரு கூட்டம்..
பெற்றவர்களின் காசை கரியாக்குவதற்காக ஒரு கூட்டம்..
கட்டழகு பெண்ணிற்காக
ஒரு கூட்டம்..
வெறும் பொழுது போக்கிற்காக
ஒரு கூட்டம்..
பணத்திமிரில் ஒரு கூட்டம்..
வறட்டு கௌரவத்திற்காக
ஒரு கூட்டம்..

தன்னை மட்டுமல்ல
தன் வீட்டை, தன் நாட்டை,
தன் பண்பாட்டை,
தன் பாரம்பரியத்தை மறந்து
வெளிநாட்டு நாகரீக மோகத்தில்
சுழலும் ஒரு உலகம்..

இது தனக்கென்று சூட்டிய பெயர் இளமை துள்ளும் வாலிப கழகம்..
நிதர்சனத்தில் என்னவோ
இதன் பெயர் வீழ்ச்சியுறும் வாலிப கழகம்..

Offline Madhurangi

பெண்ணியத்தின் வரைவிலக்கணம் அறியா..
பெருமைகள் சூழ் தமிழன்னையின் அருமைகள் அறியா..
பெருசுகளின் புலம்பல் எனும் கேலியில் அனுபவங்களின் சிறப்புகள் புரியா..
பெரும்பான்மை இளசுகளின் சங்கமம் நவீன கிளப்புகள்..

காதை பிளக்கும் கூச்சல் ஒலிகள்..
கண்ணை கூசும் வர்ணம் இறைக்கும் ஒளிகள்..
கருத்தை மறக்க வைக்கும்  வெளிநாட்டு மதுக்கள்..
காணசகிக்காத நாரசங்களுக்கு பெயரா நவீன கலையம்சங்கள் ?

நடனமதின் நளினம் இழந்தோம்..
நாணமெனும் இயல்பை துறந்தோம்..
நட்புக்கும் கற்புண்டேன்னும் எண்ணம் மறந்தோம் .. '
நவீன நாகரீகமெனும் மோக வலையில்..

போதையின் பிடியில் ஆரோக்கியத்தை இழந்து..
போதனைகள் போதிக்கும் நல்லுள்ளங்களை boomer என இகழ்ந்து..
போற்றி வளர்த்த தாய் தந்தையின் தியாகங்களை மறந்து..
போசணையற்ற நாட்டின் எதிர்காலத்தை பார்க்கும் துரதிஷ்டம் கிளப்புகளின் வாயில்களில்.. 






Offline HiNi


"Where is the party?" என்று ஒலிப்பெட்டி  முழங்க!!

2k குழந்தைகளின் நட்பு கொண்டு வந்து சேர்த்த ஓர் சமுக நிகழ்வு!!

நின்றுக்கொண்டிருக்கும் இடங்கள் யாவையும் பூசிக்கொண்டிருக்கும் வர்ண ஜாலங்கள்!!
 
சபையிலே பெரும்பான்மையோர்
 இளம் வயதினர்களின் கூட்டங்கள்!!

"Rock and Kuthu" பாணியில் காதுகளை கிளிறும் பாடல்கள்!!

"நடு தெருவில் சங்கட்டம் இல்லாமல் ஓர் நடனமா? எப்படி இப்படி?" னு உள்ளுணர்வின் குமுறல்!!!

 பக்கத்தில் இருந்தவள் கோபத்துடன் குறு  குறு பார்வையில் கடுகு தாளிக்க

Mind voice னு நினச்சு சத்தமா சொல்லிட்டேன் போல

கூட வந்தவள் "Step it  up" என்று கூச்சல் ஒலி எழுப்ப

இசைக் கச்சேரியில் நம்மை கவனிக்க ஒருத்தரும் இல்லை என தைரியம் என்னை நகர்த்த

கலையின் மீதுள்ள பற்று இறுக்கமான கால்களை தளர செய்ய

இசையில் மயங்கியவள்
கூச்ச சுபாவம் கொண்டவள்
தன் திறமைக்கு வாய்ப்பு கிடைக்காதா? னு ஏங்கியவள்
மனம் திறந்த நடனம்!!!

நதியில் குதித்து விளையாடும்
தன் வழி தெரியாத மீன் போல்

செய்வதறியாது துள்ளி குத்தித்தோடும் மான் குட்டிப் போல்

உடல் அசைவுகள் இசைக்கு இணங்கா விட்டாலும்
மனதிற்கு இணக்கமாய் ஓர் ஆட்டம்!!!

ஆடலும் பாடலும் நிகழ்ச்சியை ரசித்தவர்கள்
தற்போது தலைக்கு ஏறிய மதுவின் வினையாட்டம் என்பார்கள்!!!

 ஆம்...இது போதையின் உச்சம் தான்
மது பாட்டிலில் அடக்கி வைக்கமுடியாத நடனத்தின் என் மோகம்!!!
ஓர் நடனத்தின் உற்சவம்!!!

சமுகத்திற்கு முன் பயந்து என்னை மாற்றி கொள்ளாமல்
விண்ணில் ஆனந்தமாய் பறக்கும் பட்டம் போல்
என் விருப்பங்களை நிறைவேற்றி சிறகடிக்கும் இதயத்தை
வரைமுறையோடு கயிற்றில் கட்டி காத்தால்
எவ்விடத்திலும் ஒலியும் ஒளியும்
வாழ்வில் வசந்தமாய் மிளிறுமென உணர்த்திய தருணம்!!!!



Offline mandakasayam

புதிய நிகழ்வுகளை மகிழ்ச்சியோடு வரவேற்று அதன் கொண்டாட்டங்களை  பகிர செய்கிறது இளமை...சமூக சீர்கேடு என முத்திரைபடுத்தி அப்புறபடுத்துவது பழமை...

எல்லோருமே அதை கடந்து தானே வந்தோம் ..புத்தாண்டில் ஆரம்பித்து பிறந்தநாள் வரை .
மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்க மானுடர்களின் மனநிலை சமநிலையற்றது
'
 கட்டுக்கோப்போடு இருப்பவர்கள் கூட சமகால நண்பர்களின் ஆனந்தத்தை கண்டு அவர்களும் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்க நினைக்கிறார்களே''

விண்ணைபிளக்கும் இசையும் ஆரவாரமும் எல்லையில்லா பேரின்பம் சில மணி நேரம் தான் .. அதற்காகவா இவ்வளவு பெரும் குற்றச்சாட்டு ..
வேதனையில் உள்ளவர்கள் கூட சிறியதாக புன்னகைப்பார்கள் அந்த நகைப்பூட்டும் நடனத்தில்..

துவண்டு போனவர்கள் கூட  ஆடல் பாடலை மனமில்லாமல் ஏற்பது இயல்பு தானே ''
அதே மகிழ்ச்சியில்  ..மதுவையும் மாதுவையும்  நாடினால் வாழ்க்கை நடைபிணம்தான் .

தனக்கு தானே வசனம் எழுதிக்கொண்டு  வலம் வரும் தலைகணமுள்ளவர்களே'',
தனக்கான சுதந்திரம் பற்றி போராடுபவர்களே'
 
எல்லைக்குள் இருக்கும் வரை எல்லையில்லா ஆனந்தம் தான்.  அதற்க்கு அப்பால் சென்றால்
எவையும் நிலைக்காது .. நற்பண்புகள் தழைக்காது ...

 
« Last Edit: April 27, 2024, 12:38:49 AM by mandakasayam »

Offline Kavii



இசையின் தாளத்தில் துள்ளும் இதயங்கள்,
வின்மீன் கூட்டம்போல் ஒளிரும் முகங்கள்,
ஒளிரும் விளக்குகள் போல் மின்னும் கண்கள்,
இசையின் தாளம் கால்களை தாண்டி, உள்ளங்கைகளில் உயிர் பெறுகிறது.
ஒளியின் மயக்கம் மனதை வருட, உணர்வுகள் உச்சம் தொடும் வேளையில்
 ஒன்றுபட்ட இதய கலாச்சாரம் கொண்டாடும் வேளை இது.



இசையின் மொழியில் பல இதயங்கள் மௌன மொழி பேசும்.
அவ்விதயங்களின் துடிப்புக்கள் இசைக்கு ஒரு இசை சேர்க்கும் அழகான தருணம்.
நிகழ்வின் துளியில் காலம் நிற்கும் மாயம்.
நட்பின் ஒற்றுமையில் வண்ணங்கள் ஒளிரும் இன்னிகழ்வில் "கலைகள் எல்லைகளை கடந்து பேசும்," "மயக்கும் ஒளி விளக்குகள், சிலிர்க்க வைக்கும் ஒலித்தட்டு இசைகள். ஆனந்த நாடன் இவைகளின் ஒன்றினைவு வாழ்க்கை வாழ்க்கை என்பது வண்ணக் கூட்டம் என்பதை சொல்லும்.


சுதந்திரப் பறவைகளாகச் சுத்தித் திரியும்
 இளமை  கொண்டாட்டமாய் தெரிகிறது இது.
ஒளிரும் வண்ண விளக்குகளில் நடனமாடும் நிழல்கள்ன் ஓவியம் உயிராகிறது மயக்கும் இசையில்!
நட்பு கூட்டம் ஒன்றினைந்து காவியம் படைக்கும் ஏதோ ஒரு இன்னிகழ்வு வாழ்வின் ஒரு பக்கம் மட்டுமே,!
எல்லை மீரா நட்பும் ஒரு காவியமே நம்மி பொறுத்த வரையில்! எதிர்மரை சிந்தனைகளை விளக்கு சிநேகமாய் பார்த்தால் அழகாய் தேரியும் நட்பின் மகிழ்ச்சி கொண்டாட்டம். காதலில் கூட தொட்டு பேசுவதில் கூச்சமும் பயமும் இருக்கும். ஆனால் நட்பில் தான் எவ்வித தயக்கமும் பயமும் இருக்காது. ஏனெனில் நட்பு புனிதமானது.

« Last Edit: April 29, 2024, 08:31:55 PM by Kavii »

Offline விழியாள்

ஜாமீன் இருக்கா?


அம்மாடியோ,என்ன இந்த பக்கம்
இங்கு வர நீ கொடுக்கும் விலை
உன்னைத்தான் என்பதை மறந்து போய் வந்தாயோ?
சொந்த காலில்  நிற்கிறோம் என்ற நினைப்பா?
அவனுக்கு நீ இணை என்பதை நிரூபிக்கும் பொறுப்பா?
அல்ல ஒருமுறை செய்து பார்த்தால் என்ன எனும் எண்ணத்தினால் வந்த நெருப்பா?
இத்தகைய எண்ணங்களில் இருந்து விடுபட உன்னிடம் ஜாமீன் தான் இருக்கா?
சொல்வதை கேள்,
இது கம்பி கட்டும் கதை அல்ல
கம்பிக்குள் கைதியாய் என்னை கட்டி வைத்த கதை .
என்னை விடுதலை செய்ய உன்னிடம் ஜாமீன் தான் இருக்கா?


நான் குடும்பப் பெண் இல்லையடி
தகாத உறவின் மோகத்தால்
நான் சுமந்த பிஞ்சையும் அவன் தந்தையையும் கொன்று விட்டு போகாததால்'
நான் குடும்பப் பெண் இல்லையடி
என் மகனின் மனைவியை கூட வரதட்சனை கேட்டு வர்புறுத்தாததால்'
நான் குடும்பப் பெண் இல்லையடி
அண்டை வீட்டாரின் நடவடிக்கைகளில் சதா என் பார்வையை செலுத்தாமல் இருப்பதால்

என்னடியம்மா ஆராய்ச்சி நான் எப்படி இங்கே என்றா
யாருக்கு இல்லை வாழ்கையின் பரிதாபம்
அர்த்தமற்ற கதை சொல்லி வேண்டவில்லை உன் அனுதாபம்
இம்மாயவளின் (மது)மடியில் வீழ்ந்த நாளே என் கற்பை இழந்துவிட்டேன் அவர்களின் வசை சொற்களில்
கலாச்சார சீர்கேடும் என்னால்தான்
ஆங்காங்கே அரங்கேறும் அத்துமீறல்களும் என்னால்தான்
இந்த பழிகளிலிருந்து
விடுவிக்க உன்னிடம் ஜாமீன் தான் இருக்கா?


அதோ பார் அந்த ஆண்மகனை
இந்த pubன் வாடிக்கை நாயகனை.
அடுத்த வாரத்தின் ஆசை மணமகனை
எப்படியா?
கால்கட்டு போட்டால்
திருத்தி வாழ பழகுவானேன்
பாவத்தையெல்லாம் பங்கு போட நல்ல வழிதான்
பேசிக்கொண்டே இருக்கையில் உன் முன் வைத்த கோப்பை வெற்றிடம் கண்டதடி
மதுவின் மகளாய் மாறிய பின்
மணமகளாய் மாறும் பேராசையை கொன்று விட்டு வா!
நமக்கும் கால் கட்டா? அசடே
அதற்கு அவன் எனும் அடையாளம் வேண்டுமடி'
பாவம்  கூட இங்கே பாலினம் பார்க்குமடி
கொலை செய்தவனுக்குக் கூட விடுதலை கிட்டுமடி
பெண் நீ செய்த பிழையை
வாழ்நாள் முழுக்க சொல்லி மட்டம் தட்டுமடி
கொலையாலியும் கைவீசி செல்லுவான் இங்கே அவனாய் இருந்தால்
கைவீசி நடந்தால் கூட பரிகசிப்பர் இங்கே
அவளாய் இருந்தால்
இதற்கெல்லாம் ஜாமீன் உன்னிடம் இருக்கா?

Offline Vijis

போதையில் ஆட்டம் பாட்டம் தான் இன்றைய சந்தோசம் இவர்களுக்கு

இன்றைய இளைஞ்ர்கள் இளம்பெண்கள் துள்ளி குதிப்பதே நடனம் என்கிறார்கள்

 இளைய தலைமுறைகளை இணைக்க பல்வேறு நிகழ்ச்சில் நடனத்தை இணைத்து விடுகின்றன

 அதன் உற்சாகம் இவ்வாறு கரைபுரண்டு ஓடுகின்றது

குடும்பம் உறவுகளை மறந்து வாழ்வின் குறிக்கோளை பறக்க செய்து

 அழகான வாழ்வை அழித்து சாதிக்கும் வயதில் போதையில் அடிமையாயி

வாழ்வை இருளில் தள்ளி மரணம் அழைக்கும் விரைவில் என்பதை அறியாத தலைமுறை இவர்கள்

 நமது நாட்டின் கலாச்சாரத்துக்கு உலகமெங்கும் தனி வரவேப்பு இருக்கும்

தமிழரின் மொழி நடனம் இசை உடை தமிழர்களின் மாறாத பண்பாடு

 நடனம் நமது பாரத நாட்டின் சின்னங்கள் உடலையும் மனதையும் மகிழ்ச்சி படுத்தும் என்றார் அன்றைய கலைஞர்கள்

உண்மைதான் நடனத்துக்கு ஈர்க்கும் ஆற்றல் உண்டு பார்ப்பவர்களுக்கு விருந்து ஆடுபவர்க்கு மருந்து

 இந்த புனிதமான நடனத்தை கோவில் திருவிழாக்களில் அரண்மனையிலும் நடத்தினார்கள்

 அன்றைய காலத்து கலைகளின் வரலாற்றை மக்கள் மத்தியில் பரப்ப நடனம் தேவைப்படுத்தப்பட்டது

 பழைய மிகுந்த நாட்டிய கலைகளை மறக்கவில்லை இன்றும் நம் மனது

 இன்றைய தலைமுறை பெரும்பாலும் வெஸ்டன்யே ஆடுகின்றன

 பாரம்பரியம் மாறாத நமது நாட்டின் நடனத்தை அழகாக ஆடுங்கள்

சரியான முறையில் வழி நடத்துங்கள்

இசையுடன் கூடிய நடனம் இனிமையான விருந்து கண்களுக்கு

Offline VenMaThI



அன்பால் சேர்ந்த கூட்டமோ
ஆடம்பரத்தால் வந்த கூட்டமோ
அக்கம் பக்கம் இருப்பார் யாரோ
நமக்கென்ன அவர் யார் எவரோ....

ஆட்டம் போடும் வயது இது
ஆடித்தான் களைப்போமே ...
ஆடும் தெம்பு கால்களுக்குண்டு
எதுவரை என்றுதான் பார்ப்போமே....

பாட்டு பாடும் நெஞ்சமது
பாடித்தான் மகிழ்ந்திடுமே..
சங்கீத மொழியில் தான்
வார்த்தைகள் கோர்வையாய் நடமாடுமே...

தெரிந்தவர்கள் நம் அருகினிலே
தெரியாதோரும் நம் மத்தியிலே
ஆடிப்பாடும் நேரமிது.. நம் வாழ்க்கையின்
வண்ணமிகு வானவில் கோலமிது...

இந்த கால்களும் ஒரு நாள் களைத்துப்போகும்
ஆடும் கால்களும் ஆட்டம் கண்டுவிடும்
மனது நினைக்கும் பாதையில்.. கால்கள்
செல்ல முடியாமல் துவண்டுவிடும்...

பாடும் நெஞ்சமும் ஒரு நாள்
பாடக் கெஞ்சும்.. ஆனால்
கொஞ்சல் மொழி பேசும் மழலையாய்
வார்த்தைக்கோர்வைகள் தொற்றுப்போகும்...

ஆடவும் பாடவும் முடியாமல் போகும் நேரம்
அன்று ஆடிய ஆட்டமும் அன்று பாடிய பாட்டும்
மனதில் என்றுமே குத்தாட்டம் போடும்
நினைவலைகள் மட்டுமே நெஞ்சில் நிலையாய் நிற்கும்...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்..என்பதை
வேதவாக்காய் நித்தமும் கொண்டு
இன்பம் துன்பம் சேர்ந்ததே வாழ்க்கை... என்ற
படிப்பினையை மனதில் பதித்து....

இன்றைய நாளை இன்பமாய் செலவிடு
வரும் நாட்கள் அனைத்தும் வரவாய்... நம் வரமாய் அமையும் என நம்பிக்கை கொள்
பிறர் இன்பமுறச்செய்...நீயும் இன்புற்றிரு......


❤️❤️❤️❤️❤️


« Last Edit: May 02, 2024, 09:56:40 AM by VenMaThI »