Author Topic: சாபத்தில் நிகழ்த்த வரம்  (Read 699 times)

Offline Mr.BeaN


சல்லடை போட்டு சளித்தெடுத்து
சான்றோர் பார்த்து அமைச்சராக்கி
சொல்லிய வண்ணம் ஆட்சி
புரிந்த
மன்னர் நிறைந்த நாடு இது


மும்மாரி மழை பொழிய
புன்னகையால் முகம் மலர
கள்ளமில்லா அகம் கொண்ட
மக்களால் நிறைந்ததுவே

புரட்சிகள் பல கண்டு
மிரட்ச்சியில் தான் உழன்று
அயர்ச்சிகளை கடந்து
புகழ்ச்சிக்கு வந்ததுவே

மக்கட்கு அதிகாரம்
வந்திடவே எல்லோரும்
வாக்குரிமை பெற்றுவிட்டு
ஆட்சி செய்ய ஆள் பிடித்தார்

அடிப்படை தகுதிகள்
எதுவும் இங்கு தேவையில்லை
அனுபவம் திறமை என
எதுவும் இங்கு பார்ப்பதில்லை

பணம் தரும் மனிதர் மட்டும்
நல்லவராய் தொன்றிடவே
நாமும் வாக்களித்து
அல்லல் பல காணுகிறோம்

இப்படி ஒரு நிலையை
எண்ணிடவே என் மனதில்
சாபத்தில் நிகழ்ந்த வரம்
இதுவெனவே தொன்றிடுதே
intha post sutathu ila en manasai thottathu..... bean