Author Topic: நினைவே ..  (Read 832 times)

Offline Mr.BeaN

நினைவே ..
« on: December 14, 2023, 03:12:36 PM »
கண்டதும் காதலை கொள்ளவே என்றுமே
கனவிலும் கூட நினைத்ததில்லை

மங்கை உன் அன்பிலே தானடி நானுமே
காதலை இங்கே உணர்ந்திருந்தேன்

ஏற்ற என் காதலை தூக்கி நீ போட்டதால்
இக்கவி இன்று நான் இயற்றுகிறேன்

அக்கறை கொண்டு நீ என்னுடன் இருந்ததை
எண்ணியே இன்று நான் புலம்புகிறேன்

சுடுமென தெரிந்தும் தீயினை தொடுவதை
விரும்பிடும் மனிதர் யாருமில்லை

உந்தன் நினைவோ என்னை சுடுமே என்பதை முன்னர் அறியவில்லை

பிரிவது முடிவென தெரிந்தே உந்தன்
நினைவதை நெஞ்சில் சுமந்தேனா?

மனமதில் உந்தன் நினைவுகள் என்னை
நெருப்பென நித்தம் சுடுகிறதே

விடுகதை போலொரு வாழ்க்கையை வாழ்கிறேன்
விடை எதும் இது வரை கிடைக்கவில்லை

விடியலில் கூட உந்தன் நினைவால் கண் இமை தானே திறக்கவில்லை

பசப்பியே நீயும் அன்பினை தந்தாய் நெஞ்சில் அதுவே கசக்குதடி

என் மனம் புரிந்தே நீயும் வந்தால்
வாழ்வும் எனக்கோ இனிக்குமடி
intha post sutathu ila en manasai thottathu..... bean