முன்னால் , நீ இருந்ததும் இல்லை ,இருக்கவேண்டும் என எதிர்பார்த்ததும் இல்லை - இருந்தும்
உன்னால், எனக்கும் தமிழ் தடை இன்றி வரும், கற்பனை சிறகுகள் விரியும் என்று நினைத்ததில்லை
தன்னால் தடை இன்றி தமிழ் தவழ்கின்றது ,கவிதை மனம் கமழ்கின்றது
உன்னால் மட்டும் எப்படி சிந்தாமல் சிதறாமல் என் மனதை உதற முடிந்தது ?
என்னால் இதயத்தில் உதிரம் சிதறும் பொழுதும் கதற கூட முடியவில்லையே
மரிக்கவை
தேறா காரணத்தை கூறி
என்னை பாராமுகமாய் தவிக்கவிட்டு
ஓராயிரம் முறை உன்னை நினைக்கசெய்து
ஆறா ரணத்தை பரிசாய் அளித்து
உன் நினைவில் என் மனதை
துகள் துகளாய் தெரிக்கவைத்தவளே !
இருந்தும் உன்ஆசை தீரவில்லை என்றால்
நேராக வந்து என் உயிரை மரிக்க வை
சொல்லிவிடு
கவிதையிலே கனல் மூட்டி போறவளே !
மௌனத்திலே அதை அணைக்க சொன்னவளே
பெண்ணே, என் சொல்லெல்லாம் முள் ஆனதே
ஐயோ , என் சுவாசமும் சூடானதே
என் இதயமே இடம் மாறி துடிக்காதே
என் விழியே கண்ணீரை வடிக்காதே
என் இதயமே இடம் மாறி துடிக்காதே
என் விழியே கண்ணீரை வடிக்காதே
பெண்ணே பொய் என்பது மெய் ஆகினால் ,ஐயோ
மெய் என்பது என்னாகுமோ ?
பொய் புரிதல் நிலையாகுமோ ? சொல்லி விடு