Author Topic: உன் காதலும் என் கவிதைகளும்  (Read 653 times)

Offline thamilan

கடவுள் எழுதிய
கவிதைப் புத்தகம் நீ
அதில் எனக்கான கவிதை
உனது காதல்
அதை தினம் தோறும் வாசிக்கும்
வாசகன் நான்

உன் பார்வையில்
விடை தெரியா கேள்விகள் பல
கேள்விகளுக்கு விடை எழுதிவிட்டு
பதிலுக்காக காத்திருக்கும்
யாசகன் நான்

எப்போதோ என் இதயத்தில்
தேங்கி விட்ட
உன் காதல் தான்
இப்போது நீர்த்துப் போய்
சொட்டிக்கொண்டிருக்கிறது
கவிதைகளாக

எப்பொழுதும்
என் பேனா முனை காயாமல்
மை ஊற்றிக்கொண்டிருக்கிறது 
உன்   காதல்

எவ்வளவோ மெனக்கிட்டு
பிறகு தான் எழுதுகிறேன்
ஒரு கவிதையை
நீயோ
ஒரு நொடிப் புன்னகையில்
ஓராயிரம் கவிதைகளை
மிதக்க விடுகிறாய்
காற்றில்

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
அழகு கவி