Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 200  (Read 6634 times)

Offline MysteRy

இசை
எங்கும் இசை எதிலும் இசை
இசைக்கு பலப்பல சக்திகள் உண்டு
இதய ரணங்களை குணமாக்கும்
வருந்தும் இதயங்களை
மயில் இறகால் வருடிவிடும்

இசையின் நாதத்தில்
பாம்பே மயங்கும் போது
பாமரன் மயங்க மாட்டானா என்ன
இறைவன் படைப்பில்
எங்கும் நிறைந்திருப்பது இசை

ஒரு தாலாட்டுக்கு
அழும் குழந்தையை தூங்கவைக்கும்
சக்தி உண்டு
ஒரு பக்திப் பாடலுக்கு
இறைவனை மனமுருக வைக்கும்
சக்தி உண்டு

இசையால் சொர்கமே நம்
காலடி சேர்கிறது
கவலைகள் காற்றாய்ப் பறக்கிறது
கனத்த நம் மனம்
கரைந்து ஊதுபத்தி மனம் போலே
மேலே செல்கிறது

இந்த உலகமே அழிந்தாலும்
இசை என்றும் அழியாது
அது என்றும் வாழும்   

Offline thamilan

இசையும் இயற்கையும் ஒன்று
வீசும் காற்றில்  அடிக்கும் அலையில்
கொட்டும் மலையில் பாயும் அருவில்
எங்கும் எதிலும் வியாபித்திருப்பது இசை

இசைக்கு மொழி இல்லை
ஆண் பெண் என்ற பேதம் இல்லை
படித்தவன் பாமரன் என்ற வித்தியாசம் இல்லை
கிழவன் குழந்தை என்ற
வயதெல்லையும் இல்லை
எல்லோரது நாடிக்கமலத்திலும் நரம்புமண்டலத்திலும்
ஊடுருவிப் பாய்வது இசை   

தனிமை கொடுமையானது
அந்தத் தனிமையையே விரும்ப வைப்பது இசை
தனிமையின்  தோழன் இசை

இசை
அன்பால் அன்னை
துயர் துடைப்பதில் தோழன்
மனதை வருடிடும் காதலி


Offline BreeZe

இதயத்தின் ஓசை

ஓவியம் உயிராகிறதுக்கு
இந்த வார படத்துக்கு
உயிர் கொடுக்கவா
என் உயிரை கொடுக்கவா...

என் இதயத்தை எடுத்து
படமா இங்க போட்டுட்டாங்க
படு பாவிகள் .. என் இதயம்
பாடும் ஓசை கேட்குதா
பாருங்கள்..
லேப் டாப் , லேப் டாப்..

லேப் டாப் எடுத்து
புயலா ஒரு கவிதை
எழுத தொடங்குனா
ஒரு யோசனை, நாம்தான்
தென்றல் ஆச்சே! புயலா
எப்படி எழுதுறதுன்னு..

எத்தனை காற்று அடிச்சாலும்
தென்றல் போல வருமா
உங்க மனசு சொல்றது
கேக்குது .. கேக்குது ..
என் இதயத்தின் ஓசை
லேப் டாப் .. லேப் டாப் ..

எல்லாரும் கவிதை
போட்டுப்புட்டாங்க
ஒருகவிதையும்
வரலையே ...
அய்யப்பா .. சொக்கா...
நாளு வேற நெருங்கிட்டே
இதயத்தின் ஓசை
லேப் டாப்... லேப் டாப்....

ஓவியம் உயிராகிறது
என் கவிதை ..வாசிக்கிறாங்க..
ஆஹாஆ ...
இப்போதான் தென்றலாய்..
இதயத்தின் ஓசை ..
லப் டப்.. லப் டப்.. லப் டப்
« Last Edit: September 21, 2018, 04:05:21 PM by BreeZe »
Palm Springs commercial photography