Author Topic: பரீட்சைகளின் போது உதவும் மனப்பயம்  (Read 1118 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

பரீட்சைகளின் போது உதவும் மனப்பயம்



கடந்த கால புதிய ஆய்வுகளிலிருந்து மனப்பயமானது மூலையின் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
 
 
 
அதாவது, பரீட்சைகளின் போது இறுதி நேரம் கற்கும் விடயங்கள் ஞாபகத்தில் இருப்பது கண்டறியப்பட்டள்ளது.
 
மன வழுத்தம் ஏற்படும் போது ஹார்மோன்கள் அதிகளவில் எமது மூளையில் உற்பத்தி செய்யப்படுகின்றது.
 
இதனால் மூலையின் ஞாபக சக்தியின் அளவு அதிகரிக்கப்படுகின்றது.
 
 
 
பேராசிரியர்களின் கருத்துப் படி மனவழுத்தம் ஏற்படும் போது மாணவர்கள் கல்வி கற்கும் போது அந்த விடயங்கள் மனதில் இலகுவாக பதிந்து விடுகின்றது.
 
அந்த நேரத்தில் சுரக்கும் ஹோமோன்கள் ஞாபக சக்தியை அதிகரிக்கின்றன என கூறப்படுகிறது.
 
உதாரணமாக, எமது வாழ் நாளில் தினமும் பல விதமான சம்பவங்கள் நடைபெறுகின்றன.
 
 
 
சந்தோஷமான நிகழ்வுகளும் நடைபெறும், கவலையான சம்பவங்களும் இடம்பெறும். அவ்வாறான சம்பவங்களில் எமது மனதை அதிகளவில் பாதித்த அல்லது காயத்தை ஏற்படுத்திய சம்பவங்களே எமக்கு எப்போதும் ஞாபகத்தில் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் மனவழுத்தமாகும்.
 
 
 
பரீட்சை கால இறுதி நேரங்களில் கற்கும் விடயங்கள் எமக்கு எப்போதும் ஞாபகம் இருக்கும்.
 
இதற்கு காரணம் பரீட்சை நெருங்கி விட்டது சிறந்த பெறுபேறு பெற வேண்டும் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என மனம் எண்ணும்.அப்போது எங்கள் முழு கவனமும் பாடங்களிலேயே பதிந்திருக்கும்.
 
மனவழுத்தம் பயன் தரும் என கருதினாலும், அதிகளவிலான மனவழுத்தம் உடல் நலத்திற்கு கேடு என்பதை நாம் ஞாபகம் வைத்திருக்க வேண்டும்